IPL 2026- KKR அணியிடம் மண்டியிட்ட MI டாப் ஆர்டர்.. மானத்தை காப்பாற்றிய பவுலர்கள்
கொல்கத்தா: ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில்,பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற KKR அணிக்கு இந்தப் போட்டி கட்டாயம் வெல்ல வேண்டியதாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பிளேஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த முடிவு மிக முக்கியமானது எனக் கருதப்பட்டது. கொல்கத்தா அணி, முந்தைய போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் வீரர்களுடன் மாற்றமின்றி களம் கண்டது. இது அணியின் மீதான நம்பிக்கையைத் தெளிவுபடுத்தியது.

மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகி இருந்த நிலையில், இந்தப் போட்டியில் தலைமைப் பொறுப்பைப் மீண்டும் ஏற்றுக்கொண்டு அணிக்குத் திரும்பினார். முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவும் அணியில் இணைந்து, பேட்டிங் வரிசைக்கு அனுபவத்தையும் திறமையையும் சேர்த்தார்.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பம் சாதகமாக இல்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சௌரப் துபேவின் துல்லியமான பந்துவீச்சு, மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்குச் சவால் அளித்தது. குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற ஜாம்பவான்களை துபே வெளியேற்றினார். பவர்ப்ளே முடிவில், KKR அணி ஆட்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி, மும்பை அணியின் ரன் சேகரிப்பை கட்டுக்குள் வைத்திருந்தது.
ஆட்டம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த வேளையில், இரவு 8.16 மணியளவில் திடீரென பெய்த கனமழையால் போட்டி தடைபட்டது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 7.6 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. மைதானப் பணியாளர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கி பிட்ச் மற்றும் மைதானத்தை விரைந்து மூடினர்.
மழைக்கு பிந்தைய ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியாவும் திலக் வர்மாவும் இணைந்து தங்கள் அணியின் இன்னிங்ஸை சரிசெய்ய கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தனர். 10.4 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்திருந்தது. KKR பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தத்தை நீடித்து, ரன் சேகரிப்பை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
கேப்டன் ஹர்திக் 26 ரன்களும், திலக் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் கார்பின் போஸ் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. கேகேஆர் பந்துவீச்சில் கிரீன், துபே, கார்த்தி தியாகி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications

