Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2026 போட்டிகளையும் விட்டு வைக்காத LPG சிலிண்டர் பிரச்சினை.. பிசிசிஐ முக்கிய அப்டேட்

டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் அரசியல் மோதல்கள் காரணமாக இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், சமையல் எரிவாயு விநியோகம் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இதனால், பல உணவகங்கள் சமையல் எரிவாயு பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தங்கள் மெனு வகைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.எரிபொருள் விநியோகத்தில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டு மற்றும் அத்தியாவசியமற்ற துறைகளுக்கு சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிக்கை வெளியிட்டது.

மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அதிக எல்பிஜி உற்பத்தி செய்து, அதனை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தச் சூழல் குறித்து பேசிய ஐபிஎல் தலைவர் அருண் தூமல், லீக் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். "நாங்கள் நிலைமையை மறுஆய்வு செய்து வருகிறோம். இது மாறிக்கொண்டிருக்கும் சூழல் என்பதால், இப்போதைக்கு எதையும் கூற இயலாது. ஆனால், நிலைமையின் தேவைக்கேற்ப நாங்கள் முடிவெடுப்போம்," என்று தூமல் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லைஎன்றாலும், மாநிலத் தேர்தல்களுடன் போட்டி நடைபெறுவதை தவிர்க்க வாரியம் பணியாற்றி வருகிறது. எனினும், தற்போதைய எரிவாயு நெருக்கடி தொடர்ந்தால், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும். எல்பிஜி விநியோகப் பிரச்னை மட்டுமின்றி, போஙககுவரத்து கட்டுப்பாடுகளும் மற்றொரு சவாலாக உள்ளன.

அண்மையில் இந்தியா வென்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் போதும் இந்த சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த மோதல் காரணமாக விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டதால், ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்தியாவிலிருந்து வெளியேறுவதில் தாமதங்களை எதிர்கொண்டன.

இத்தகைய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், பல ஐபிஎல் அணிகள் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் தங்கள் பயிற்சி முகாம்களைத் தொடங்கியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மையத்தில் பல நாட்களாகப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அங்கு சுமார் 10 வீரர்கள் தினமும் பயிற்சி பெறுகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணியும் தரம்சாலாவில் தங்கள் முகாம்களை நடத்தி வருகிறது.

Story first published: Tuesday, March 10, 2026, 22:11 [IST]
Other articles published on Mar 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+