லக்னோ: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. போட்டியின் போது, லக்னோ வீரர் பிரின்ஸ் யாதவ், டெல்லி பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லக்னோவில் நடந்த இந்தப் போட்டியின் ஐந்தாவது ஓவரில், ரன் சேஸிங்கின்போது இருவரும் நேருக்கு நேராக சந்தித்து சில வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி கொண்டனர்.
காயம் குணமடைந்த மயங்க் யாதவ் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆவேஷ் கான் ஆகியோருக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட பிரின்ஸ் யாதவ், தனது முதல் ஓவரிலேயே பதும் நிஸ்ஸங்கா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை அவுட்டாக்கி தனது தேர்வை நியாயப்படுத்தினார். டெல்லி கேப்டனை டக் அவுட் செய்த உடனேயே, வலது கை வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ், புதிய பேட்ஸ்மேனான டிரிஸ்டன் ஸ்டக்ஸை நோக்கி முழு வேகத்தில் பந்துவீசி வந்தார்.

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனான ஸ்டப்ஸ், பந்துவீச்சாளரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அழுத்தத்தைக் குறைத்தார். இதற்கு பதிலடியாக, பிரின்ஸ் யாதவ் அடுத்த பந்தையே டாட் பாலாக வீசினார். பந்துவீசி முடித்ததும், யாதவ் ஸ்டப்ஸின் அருகில் சென்று, சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டு முறைத்துப் பார்த்தபடியே விலகிச் சென்றார்.

பிரின்ஸ் யாதவின் இந்தச் செயலுக்கு ஸ்டப்ஸும் அதேபோன்று முறைத்துப் பார்த்ததுடன், தனது பங்கிற்கு சில வார்த்தைகளைத் தெரிவித்தார். அதற்குப் பிறகு, பந்துவீச்சாளர் விலகிச் செல்ல, அந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. இது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரின்ஸ் யாதவ் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் மூன்று ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமியுடன் இணைந்து புதிய பந்தில் பந்துவீசிய அவர், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆரம்பக்கட்ட சரிவில் முக்கியப் பங்காற்றினார். இதனால் அவர்களின் ரன் சேஸிங் கடுமையான சவாலுக்கு உள்ளானது.

ஸ்டப்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2026 போட்டியில் சமீர் ரிஸ்வியுடன் இணைந்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார். ஐந்தாவது ஓவரில், 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில், ஸ்டப்ஸ் ஆறாவது இடத்தில் களமிறங்கினார். இம்பாக்ட் பிளேயரான சமீர் ரிஸ்வியுடன் இணைந்து, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.