IPL 2026: தொடர்ந்து தடுமாறி வருகிறோம்.. எங்கள் திட்டத்தை மாற்றனும்.. MI கேப்டன் ஹர்திக் பாண்டியா
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவி, தற்போது புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ஆர்சிபிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய ஹர்திக், சமீபத்திய போட்டிகளில் அணி தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதிக விக்கெட்டுகளை இழந்ததும், எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததுமே இதற்கு முக்கியக் காரணம். ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து ரன்களை ஈடுசெய்யவே வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த சில ஆட்டங்களில், பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலுமே விளையாட்டை வழிநடத்தாமல், பின்தங்கிப் பிடிக்கவே முயன்று வருகிறோம். இந்த நிலையை மாற்ற, அணி ஆழமாக மறுபரிசீலனை செய்து, தேவையான உத்வேகத்தையும், வெற்றிக்கான பணியையும் எப்படிப் பெறுவது என ஆராய வேண்டும்.

அடுத்த போட்டிக்கு முன் சில நாட்கள் ஓய்வு இருப்பதால், தற்போதைய உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். “நேர்மையாகச் சொல்லப்போனால், தற்போதைய அணுகுமுறை செயல்படவில்லை. டாஸ் வென்றும் கூட, பேட்டிங் அல்லது பந்துவீச்சில் வேறு என்னென்ன வழிகள் உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும்,”
பிட்ச்சின் தன்மையைப் பொருத்து முதலில் பேட் செய்வதும் ஒரு நல்ல முடிவாகலாம். நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும், நன்றாக பேட் செய்ய வேண்டும், சிறப்பாக பந்துவீச வேண்டும். இதைச் சரியாகச் செய்தால், டாஸ் ஒரு பொருட்டல்ல.
பவர்பிளேயில் உத்வேகத்தைப் பெறுவது குறித்து தற்போது தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. “பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே பவர்பிளே ஓவர்களில் நாங்கள் பெரும்பாலும் பின்தங்கியே முயற்சிக்கிறோம். புதிய உத்திகள் வடிவமைக்கப்பட்டு, அடுத்த போட்டியில் அமல்படுத்தப்படும்.
ரதர்ஃபோர்டின் வருகை அணிக்கு பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது..அவரது திறனையும் அதிரடிப் பவர் ஆட்டத்தையும் நாங்கள் அறிந்திருந்தோம். அவர் பேட் செய்யும் விதம் அணிக்கு கூடுதல் பலத்தையும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யக் கூடிய நம்பிக்கையையும் தருகிறது,” என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.


Click it and Unblock the Notifications