IPL 2026: சிஎஸ்கே அணியுடன் லக்னோ புறப்பட்ட தோனி.. இந்த தேதியில் போட்டியில் பங்கேற்க திட்டம்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, லக்னோவுக்கு அணியுடன் பயணிக்கவுள்ளார். ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டி மே 15, வெள்ளிக்கிழமை எகானா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ப்ளேஆஃப் சுற்றில் நீடிக்க ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கேவுக்கு இப்போட்டி மிக முக்கியம்.
இந்த ஐபிஎல் சீசனில், காயம் காரணமாக எம்.எஸ். தோனி ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. ஆரம்ப போட்டிகளில் பங்கேற்காத அவர், சீசனின் நடுப்பகுதியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான வெளியூர் போட்டிகளுக்கு அணியுடன் பயணிக்கத் தொடங்கினார்.

காயத்தை மீண்டும் தீவிரப்படுத்தியதாக ஒருபுறமும், அணியின் வெற்றி பார்முலாவை தொந்தரவு செய்ய விரும்பாததால் விளையாடவில்லை என மறுபுறமும் தகவல்கள் வந்தன. சிஎஸ்கே டெல்லியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சமீபத்திய பயணத்திலும் அவர் இல்லை. இந்த நிலையில், "எம்.எஸ். தோனி நாளை லக்னோவுக்குப் பயணம் செய்யக்கூடும்" எனக் கூறப்பட்டுள்ளது. அவர் லக்னோ செல்லும் அணியின் ஒரு பகுதியாக இருப்பார் என உறுதியாகியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ப்ளேஆஃப் வாய்ப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், அவர்களை வீழ்த்தி, சிஎஸ்கே முதல் நான்கு இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை வலுப்படுத்தலாம். காயம் காரணமாக விளையாட முடியாதபோதிலும், எம்.எஸ். தோனி சமீபத்தில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே பயிற்சி அமர்வுகளில் கலந்துகொண்டார்.
அண்மைய நெட் பயிற்சி அமர்வுகளில், தோனி வீரர்களுடனும், பயிற்சியாளர் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். அத்துடன், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியும், பந்துவீசும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டார். இந்த சீசனில் சிஎஸ்கே-க்கு ஒரே ஒரு ஹோம் ஆட்டம் மட்டுமே உள்ளது, அது மே 18 திங்கட்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக நடைபெறும். அதில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications