சென்னை: வரும் ஐபிஎல் 2026 சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் தோனி களமிறங்குவார் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் உறுதியாகக் கூறியுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் உட்பட எந்த நிர்வாகத்தினாலும் 44 வயதான தோனியை நீக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தோனியின் 19வது ஐபிஎல் சீசன் ஆகும்.
தோனியின் பேட்டிங் திறன் கடந்த ஐந்தாண்டுகளாகக் குறைந்துள்ளதால், வரும் சீசன்களில் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. Impact Player இடத்திற்கு தோனி வருவார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிஎஸ்கேவின் அடுத்தடுத்த மோசமான ஆட்டங்கள், தோனி மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன. ஆனால், தோனி ஒரு இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்பில்லை, அது 'நடைமுறையில் சாத்தியமற்றது’ என பத்ரிநாத் உறுதியாகக் கூறினார். சஞ்சு சாம்சன் சாதாரண வீரராக தான் அணியில் தொடர வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் எனக் குறிப்பிட்டிருந்த சூழலில், பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் இவ்வாறு பேசினார். “பிளமிங் தோனியிடம் சென்று, 'இந்தப் போட்டியில் நீங்கள் விளையாட வேண்டாம், நாங்கள் உங்களை நீக்குகிறோம் என்று சொல்வாரா? பிளமிங்கிற்கு அதற்கு சற்றும் வாய்ப்பில்லை. தோனியிடம் எப்படிச் சென்று 'நீங்கள் நீக்கப்பட்டுவிட்டீர்கள்’ என்று சொல்வார்? அது நடைமுறையில் சாத்தியமில்லை,”
“உண்மையில் அது சாத்தியமில்லை என நான் உணர்கிறேன். உலகில் உள்ள எந்தவொரு துணைப் பணியாளரோ, பிளமிங்கோகூட தோனியிடம் 'நீங்கள் இன்று இம்பேக்ட் வீரராக விளையாடுங்கள் என்றோ, 'இந்தப் போட்டியில் விளையாட வேண்டாம்’ என்றோ கூற முடியாது. ஒருபோதும் அத்தகைய வாய்ப்பு இல்லை. தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை நாம் உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்,” என பத்ரிநாத் வலியுறுத்தினார்.

தோனிக்குப் பிந்தைய காலத்திற்கான அணியை உருவாக்கும் நோக்கில், சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை ₹18 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இது சிஎஸ்கேவின் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றாகும். சாம்சன் மட்டுமல்லாமல், உர்விலில் பட்டேல் உள்ளிட்ட பல இளம் விக்கெட் கீப்பர் தேர்வுகளும் சிஎஸ்கேவிடம் உள்ளன.அணியின் முகமாக தோனி கண்டிப்பாக இருப்பார் என்றாலும், களத்தில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பது இம்முறை அதிகளவு கண்காணிக்கப்படும்.