IPL 2026: மும்பை அணி கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தை ஒரு முறை பாருங்கள்.. ரவி சாஸ்த்ரி காட்டம்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கேக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றொரு ஏமாற்றமான தோல்வி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற மும்பை அணி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியின் ஆட்டம் இச்சீசன் முழுவதும் உத்வேகமின்றி இருந்தது.
ஐந்து முறை சாம்பியனான மும்பை, ஒன்பது போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நிற்கிறது. மீதமுள்ள அனைத்திலும் வென்றாலும் அதிகபட்சம் 14 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இது போதாததால் அணிக்கு நெருக்கடி அதிகம்.

போட்டி முடிந்ததும், முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்தார். "பெரும் திறமை இருந்தும், மும்பை இந்தியன்ஸ் தங்கள் முழு திறனை வெளிப்படுத்தவில்லை என்பதில் ஏமாற்றமடைந்திருக்கும். இது ஒரு ஏமாற்றமான சீசன்," என்று சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு சாஸ்திரி குறிப்பிட்டார்.
இந்த சீசனின் பின்னடைவுகளுக்கான காரணங்களை ஆழமாக ஆராய வேண்டும் என்றும் சாஸ்திரி வலியுறுத்தினார். மறுபுறம், கேப்டன் ஹர்திக் பாண்டியா, "இன்றைய போட்டி துரதிர்ஷ்டமானது. ஐபிஎல்லில் இன்னும் ஒரு மாதம் இருக்க, இந்த சீசன் எப்படி இருந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்," என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்தார்.
பலவீனமான பேட்டிங் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை, நமன் திர் (57 ரன்கள்) உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களே எடுத்தது. சென்னை தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
160 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை, 18.1 ஓவர்களிலேயே அதை எளிதாக எட்டியது. ருதுராஜ் கெய்க்வாட் (67*) மற்றும் கார்த்திக் ஷர்மா (54*) ஆட்டமிழக்காமல் இணைந்து, 8 விக்கெட் வித்தியாசத்திலான அபார வெற்றியை சென்னைக்கு உறுதிப்படுத்தினர்.
தோல்விக்குப் பிறகு பாண்டியா, "இது எங்களுக்குச் சரியான சீசன் இல்லை" என்று ஒப்புக்கொண்டார். தங்கள் அணியின் பேட்டிங், பந்துவீச்சு என எந்தத் துறையிலும் உற்சாகம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "அவர்கள் (சென்னை) சிறப்பாக விளையாடினார்கள், பந்துவீசினார்கள், பீல்டிங் செய்தார்கள், மேலும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்," என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications