Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி விக்கெட்டை எடுத்த பவுலருக்கு இந்திய அணியில் வாய்ப்பு.. தேர்வுக்குழு எடுக்கும் முடிவு

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், வரவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற தேர்வுக் குழுவின் தீவிர பரிசீலனையில் உள்ளார். 2026 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் முதல் சர்வதேச தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய, தேர்வுக் குழு மே 19 செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா ஒரு டெஸ்ட் அல்லது ஒருநாள் தொடரில் ஒன்றில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹர்ஷித் ராணாவின் நீண்டகால முழங்கால் காயத்தால், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்தியாவின் வேகப்பந்துவீச்சுத் துறையை மேம்படுத்த சில புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரின்ஸ் யாதவ், தனது சிறப்பான ஃபார்ம் காரணமாக ஒரு வலுவான ஒரு தேர்வாகக் கருதப்படுகிறார். வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாகச் செயல்பட்டு வருகிறார். இதுவரை 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, போட்டியின் நான்காவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆவார். இவரின் பந்துவீச்சு சராசரி 24.00 மற்றும் எக்கானமி விகிதம் 8.53 ஆகும். இது அவரது பந்துவீச்சின் தரத்தைக் காட்டுகிறது.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக, 2025-26 விஜய் ஹசாரே டிராபியிலும் பிரின்ஸ் யாதவ் தனது திறமையை வெளிப்படுத்தினார். டெல்லி அணிக்காக விளையாடிய அவர், எட்டு போட்டிகளில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடரின் ஐந்தாவது அதிக விக்கெட் எடுத்தவராக ஜொலித்தார். நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை எடுத்த அவரது முயற்சி, விராட் கோலியை அழகிய சீம் பந்து மூலம் அவுட் செய்தார்.

ஹர்ஷித் ராணா விரைவில் குணமடைய வாய்ப்பில்லாத நிலையில், பிரின்ஸை களமிறக்கிப் பார்க்க இதைவிட சிறந்த தொடர் இல்லை. இந்திய அணி, சுப்மன் கில்லின் ஒருநாள் கேப்டன்சி கீழ் ஏற்கனவே இரண்டு ஒருநாள் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் இழந்த தொடரும் இதில் அடங்கும்.

இந்தச் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தைத் தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம், ஜூன் 6 முதல் முல்லன்பூரில் நடைபெறும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பமாகிறது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மோதும். மூன்று ஒருநாள் போட்டிகள் ஜூன் 14 முதல் நடைபெறும். இந்த ஒருநாள் போட்டிகள் தர்மசாலா, லக்னோ மற்றும் சென்னை ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும். இந்தத் தொடர் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்பில் ஒரு முக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கும். இது இந்திய அணிக்கு மிக முக்கியமாகும்.

Story first published: Sunday, May 17, 2026, 10:18 [IST]
Other articles published on May 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+