IPL 2026 பிளே ஆப் குஜராத் vs ஆர்சிபி இன்று மோதல்.. வெல்லப்போவது யார் என முன்னாள் வீரர் கணிப்பு
ஐபிஎல் 2026 பிளேஆஃப் சுற்றுக்கு முன்னதாக, முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தீப் தாஸ்குப்தா ஒரு முக்கிய கணிப்பை வெளியிட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியின் (Qualifier 1) முடிவை, ஆட்டத்தின் பவர்பிளே ஓவர்கள்தான் தீர்மானிக்கும் என அவர் கூறியுள்ளார்.
GT-யின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கும், RCB-யின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கும் இடையிலான பவர்பிளே மோதல், போட்டியின் ஒட்டுமொத்த முடிவை நிர்ணயிக்கும் என தாஸ்குப்தா கணித்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் வெல்லும் அணியே ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜியோ சினிமா தளத்தில் பேசிய தீப் தாஸ்குப்தா, "முதல் தகுதிச் சுற்றின் மிகப் பெரிய மோதல், குஜராத் டைட்டன்ஸின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கும், புதிய பந்துடன் வீசும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கும் இடையிலான பவர்பிளே போட்டிதான். கடந்த ஆட்டத்தில், சுப்மன் கில் ஹேசில்வுட்டுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். அதே சமயம் புவனேஷ்வர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆரம்பத்திலேயே அழுத்தத்தை உருவாக்கினார்" என்றார்.
,"அந்த முதல் ஆறு ஓவர்கள் ஆட்டத்தின் திசையைத் தீர்மானிக்கக் கூடும். ஏனெனில், இரு அணிகளும் சிறப்பான தொடக்கத்தை பெரிதும் நம்பியுள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அதுவே கோப்பையை வெல்லும் என்பது என் உள்ளுணர்வு" என்றும் தெரிவித்தார்.
நடப்பு சாம்பியனான RCB, Qualifier 1 போட்டியில் GT அணியை தர்மசாலாவில் செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் இடம் பிடிப்பதே இப்போட்டியின் மிகப் பெரிய இலக்காக உள்ளது.
லீக் சுற்றில் RCB அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 14 போட்டிகளில் ஒன்பது வெற்றிகளையும் ஐந்து தோல்விகளையும் பதிவு செய்தது. 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. GT அணியும் ஒன்பது வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்றிருந்தாலும், சிறந்த நெட் ரன் ரேட் காரணமாக RCB முதலிடம் பெற்றது.
புள்ளி அட்டவணையில் RCB முன்னிலை வகித்தாலும், GT அணி வலுவான உத்வேகத்துடன் இந்தப் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைகிறது. ஏனெனில், கடந்த ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது.மறுபுறம், RCB அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்த பின்னரே இந்தப் போட்டிக்குத் தயாராகிறது.


Click it and Unblock the Notifications

