IPL 2026:ரிஷப் பண்ட் LSG அணி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு..மார்க்கரம்மை நியமிக்க திட்டம்
லக்னோ: ஐபிஎல் 2026 தொடரில் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்து, நடப்பு சீசனில் ஐந்தாவது தொடர் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் எட்டு தொடர் தோல்விகளால் கேப்டன் ரிஷப் பந்தின் கேப்டன்ஷி கேள்விக்குறியாகியுள்ளது. முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபர், சரிவைத் தடுக்க எய்டன் மார்க்ரமை கேப்டனாக்க பரிந்துரைத்துள்ளார்.
ஜாஃபர் தனது யூடியூப் சேனலில், "லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தற்போது முழுவதுமாகத் தடுமாறுகிறது. அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது என்பதே தெரியவில்லை. நான் அங்கு இருந்திருந்தால், முதலில் எய்டன் மார்க்ரமை கேப்டனாக்குவேன்," என்று கூறினார்.

"மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷை துவக்க வீரர்களாகவும், மூன்றாம் இடத்தில் நிக்கோலஸ் பூரனையும், நான்காம் இடத்தில் ரிஷப் பந்தையும், ஐந்தாம் இடத்தில் ஆயுஷ் படோனியையும், ஆறாம் இடத்தில் அப்துல் சமதையும், ஏழாம் இடத்தில் முகில் சௌத்ரியையும் களமிறக்குவேன். இதுதான் எனது முதல் ஏழு பேட்ஸ்மேன்கள் வரிசை."
கேப்டன் பொறுப்பால் ரிஷப் பந்தின் பேட்டிங் பாதிக்கப்படுவதாக ஜாஃபர் கருதுகிறார். அவர் இரு சீசன்களில் 21 இன்னிங்ஸ்களில் 458 ரன்கள் (மூன்று அரை சதங்கள்) மட்டுமே அடித்துள்ளார். அண்மைய KKR போட்டியில் 10 ரன்களில் கேமரூன் கிரீனால் ஆட்டமிழந்த பந்த், ஒருமுறை 42 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லத் தவறினார்.
"ரிஷப் பந்த் போன்ற வீரர் சுதந்திரமான பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும். கேப்டன் பதவி அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது. எய்டன் மார்க்ரம் சிறந்த கேப்டன், அவர் தென்னாப்பிரிக்காவை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார், மன உறுதி, அமைதி கொண்டவர்," என்றார்.
கடந்த சீசனிலிருந்து பந்த் தலைமையில் 22 போட்டிகளில் 14 தோல்விகளைச் சந்தித்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மேலும் சறுக்கலுக்கு முன் நிலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசர தேவையை எதிர்நோக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

