IPL 2026: பேட்டிங்கின் போது ஸ்ரேயாஸ் ஐயர் காயம்.. போட்டி முடிந்த பிறகு உடல்தகுதி குறித்து அப்டேட்
சந்திகார்: ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வலது கையில் அடிபட்டு காயமடைந்தார். இந்த வலியின் காரணமாக சிறிது நேரம் சிகிச்சை தேவைப்பட்டாலும், அது குறித்து பேசிய அவர்"நான் அதை துரதிர்ஷ்டவசமாக்க விரும்பவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
போட்டியின் போது, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சேசிங்கின் 12ஆவது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. ரஷீத் கான் வீசிய பந்தை, கூப்பர் கானோலி நேராக அடித்தார். அப்போது, பந்தை நகர்த்துவதற்குள், நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த ஐயரின் கையில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர், ஐஸ் ஒத்தடம் தேவைப்பட்டாலும், சற்று நேரத்திலேயே ஆட்டமிழந்தார்.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தனது காயம் குறித்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், "என் கை நன்றாக இருக்கிறது. அவ்வளவே சொல்ல முடியும். முன்பு எப்படி இருந்ததோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது. நான் அதை துரதிர்ஷ்டவசமாக்க விரும்பவில்லை," என்று கூறினார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டுக்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து சற்றே தடுமாறியது. இருப்பினும், ஐபிஎல் அறிமுக வீரர் கூப்பர் கானோலி, 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கூப்பரின் ஆட்டம் குறித்துப் பேசிய ஐயர், "அவர் அடித்த சில ஷாட்கள் உண்மையிலேயே நம்பமுடியாதவை. நான் உள்ளே என் கைக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தேன், திடீரென நாங்கள் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். ஐபிஎல்-லில் இவையெல்லாம் நடக்கும். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். கூப்பர் அங்கிருந்தார். அவர் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார்,” எனப் பாராட்டினார்.
மேலும், "மூன்றாவது ஓவருக்குப் பிறகு பிட்ச் மெதுவாக இருப்பதை உணர்ந்தோம். அர்ஷ்தீப் வந்து பந்து சற்று நின்று வருவதாகக் கூறினார், நாங்கள் பந்தை விரைவில் பழமையானதாக மாற்ற முயன்றோம். வைஷாக் கடந்த சீசனில் செய்த ஆட்டத்தை இப்போதும் தொடர்கிறார்; அவர் ஒரு பெரிய போட்டி வீரர்,” என்று ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டினார்.
தான் பேட்டிங் செய்ய வந்தபோது, எதிரணி கேப்டன் ஷுப்மன் கில், தனக்கு எதிராக ஒரு ஷார்ட்-லெக் களவியூகத்தை அமைத்திருந்தது குறித்து ஐயர் குறிப்பிட்டார். ஷார்ட் பந்துகளுக்கு எதிராக தான் சிரமப்படுவதை எதிரணி கேப்டன்கள் குறிவைப்பார்கள் என்பதை அறிந்திருந்தாலும், இந்த வியூகம் தனக்கு ஒரு புதிய அனுபவம் என்று கூறினார். "நான் ஷுப்மன் கில்லிடம், இதுபோன்ற ஒரு வியூகத்தை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று கூறினேன், கேப்டன்கள் தாக்குதல் தொடுப்பதைப் பார்ப்பது நல்லது," என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications