Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: கொல்கத்தா அணியை கிண்டல் செய்ததாக ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி மீது விமர்சனம்.. ஸ்ரேஷ்டா விளக்கம்

சண்டிகர்: பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த விமர்சனங்களுக்கு விமர்சனங்களுக்கு, ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஷ்டா பதிலடி கொடுத்துள்ளார். தேவையற்ற வெறுப்பை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கூறி உள்ளார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஐபிஎல், லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பலத்த மழை காரணமாக இந்த ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மழை குறுக்கிட்ட போது, கொல்கத்தா அணி 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இரவு 11:14 மணி வரை காத்திருந்தும் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாததால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

IPL 2026 Shreyas Iyer Sister s Bold Response to Critics After a Video Mocking KKR in IPL 2026 Match

போட்டி கைவிடப்பட்டதை அடுத்து, ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஷ்டா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "பஞ்சாபியர்களுக்கு எப்போதுமே பெரிய மனது, இந்தாருங்கள் ஒரு புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள்" என கொல்கத்தா அணியை கிண்டல் செய்வது போல் பேசியிருந்தார். இந்த வீடியோ பரவி, கொல்கத்தா அணி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பலரும் இணையத்தில் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து தனது வீடியோ குறித்து ஸ்ரேஷ்டா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எதற்காக இணையத்தில் இவ்வளவு வெறுப்பை பரப்புகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. இது வெறும் விளையாட்டு மட்டுமே. அந்த வீடியோ வெறும் வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. எனது சகோதரனுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் வந்துள்ளேன். அதை நான் தொடர்ந்து செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த அணியின் மீதும் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. இதை அனைவரும் விளையாட்டுத் தனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நான் யாரையும் தவறாக விமர்சிக்கவில்லை. அது என்னுடைய கொண்டாட்ட முறை, அதை நான் தொடர்ந்து செய்வேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த ஆட்டத்தின் மூலம் கிடைத்த 1 புள்ளியுடன் சேர்த்து, பஞ்சாப் அணி 3 போட்டிகளில் 5 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை எந்த புள்ளியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 8, 2026, 10:21 [IST]
Other articles published on Apr 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+