IPL 2026: வாழ்க்கையில் வென்ற சுப்மன் கில்.. வெற்றிக்கு பின் பெற்றோருடன் நடனமாடி மகிழ்ச்சி
மும்பை: ஐபிஎல் 2026 தகுதிச்சுற்று 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. மே 29 அன்று நடந்த இப்போட்டியில், கேப்டன் ஷுப்மன் கில் தனது ஐந்தாவது ஐபிஎல் சதத்துடன் (53 பந்துகளில் 104 ரன்கள்) அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கில்லின் சதம், GT அணி நிர்ணயிக்கப்பட்ட 215 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களிலேயே எட்ட உதவியது. இது ஐபிஎல் பிளேஆஃப்களில் அதிக வெற்றிகரமான சேஸிங். போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில், கில்லின் தந்தை லக்விந்தர் சிங் வெற்றிக் களிப்பில் நடனமாட, முதலில் வெட்கப்பட்ட ஷுப்மன் கில், பின்னர் பெற்றோருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

ஷுப்மன் கில் இந்த ஐபிஎல் 2026 தொடரில் அபாரமான ஃபார்மில் உள்ளார். 15 இன்னிங்ஸ்களில் 163.72 ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தம் 722 ரன்கள் குவித்து, ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் 15 பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்களுடன் இடைவெளிகளைக் கண்டறிந்து அடித்த அவரது திறமை கவனிக்கப்பட்டது.
போட்டிக்குப் பின் பேசிய கில் , "நீங்கள் நன்றாக பேட் செய்கையில் இடைவெளிகளைப் பார்த்து எல்லாவற்றையும் சரியாக அடிக்கலாம். நாங்கள் 220 ரன்கள் இலக்கை பெற்றதில் அதிர்ஷ்டசாலி. ஒரு கட்டத்தில் அவர்களை 180-190 ரன்களுக்குள் கட்டுப்படுத்தலாம் என நினைத்தோம்," என்றார்.
"ஆனால் ஒரு பெரிய இலக்கைப் பெற்றோம். நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்ற பிறகு, நான் விளையாட்டை முடிக்க விரும்பியதாகப் பேசினோம். நான் அவுட் ஆன விதம் மிகவும் வருத்தம் அளிக்கிறது." ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் 15வது ஓவரின் இறுதியில் எல்.பி.டபிள்யூ ஆகி கில் வெளியேறினார்.
இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டி மே 31 ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications

