ஐதராபாத்: ஐபிஎல் 2026 சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ( ஏல உத்தி குறித்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். அணி 300 ரன்கள் அடிக்கும் அளவுக்கு வலுவாக இருந்தாலும், எதிரணிகளும் அதே ரன்களை அடிக்க விட்டு கொடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2026 ஏலத்தில், SRH ₹20.05 கோடியை செலவிட்டு 10 வீரர்களை வாங்கியது. பெரும்பாலானோரை அடிப்படை விலையில் எடுத்தனர். லியாம் லிவிங்ஸ்டோன் ₹13 கோடிக்கு வாங்கப்பட்டது அதிகபட்ச தேர்வானது.

அணியின் பேட்டிங் குறித்து தனது யூடியூப் வீடியோவில் சோப்ரா, "அவர்கள் பேட்டிங்கை மிகவும் வலுவாக்கியுள்ளனர். இம்முறை 300-க்கு மேல் அடிக்கலாம். ஆனால் எதிரணியும் 300 அடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது சிறந்த உத்தியா? தெரியவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "லியாம் லிவிங்ஸ்டோனை எடுத்திருந்தால், அவரை நிச்சயம் விளையாட வைப்பார்கள். அதனால் ஈஷான் மலிங்கா அல்லது பிரைடன் கார்ஸை புதிய பந்துடன் விளையாட முடியாது" எனப் பந்துவீச்சு பேலன்ஸ் மாறி இருப்பதை சுட்டிக்காட்டினார்.
பந்துவீச்சில், "பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச யாரும் இல்லை. ஷமியை விட்டது பெரிய இழப்பு. எனவே, ஒரு கட்டத்தில் புதிய பந்து பௌலர் தேவை. அதை அவர்கள் எடுக்கவில்லை," என சோப்ரா கவலை தெரிவித்தார். ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பே முகமது ஷமி லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு டிரேடு செய்யப்பட்டிருந்தார்.
சுழற்பந்துவீச்சிலும் குறைபாடுகளைக் கண்ட அவர்: "ராகுல் சஹாரை விட்டுவிட்டனர். ஜீஷான் அன்சாரி மற்றும் ஷிவாங் குமார் உள்ளனர். ஷிவாங் நன்றாக பந்துவீசுவதாக அறிந்தேன். ஆனால் இது சரியா? அப்படி தோன்றவில்லை. அங்கு சிறிய கவலை உள்ளது" என்று தனது விமர்சனத்தைப் பதிவு செய்தார். முன்னதாக ஸ்ரீகாந்தும், சன்ரைசர்ஸ் அணி லிவிங்ஸ்டோனை எடுத்து தவறு செய்துவிட்டதாகவும், 20 ஓவர்களை வீச கூட பவுலர்கள் இல்லை என்றும் விமர்சித்தார்.