ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், பந்தை நடுவர்களிடம் கொடுக்க மறுத்த ஆர்சிபி அணியின் டிம் டேவிட்டை கள நடுவர்களால் கடுமையாக திட்டிய சம்பவம் அரங்கேறியது. போட்டி நடுவே பந்து மாற்றப்பட்டதால் டிம் டேவிட் அதிருப்தி அடைந்திருந்தார். இச்சம்பவம் முதல் இன்னிங்ஸின் 18வது ஓவரில் நிகழ்ந்தது.
ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் டேவிட் சிக்ஸர் அடித்த பிறகு, பந்து ஈரமாக இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி அதை மாற்றக் கோரியது. ஈரமாக இருக்கும் பந்துகளை மாற்றுவது லீக்கின் விதிகளில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட பந்தின் தரத்தைப் பற்றி அவர் சந்தேகத்துடன் இருந்ததால், அதை தனது கைகளிலேயே தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். இதனால், ஆட்டத்தைத் தொடங்குவதற்காக நடுவர்களிடம் பந்தை உடனடியாகக் கொடுக்க மறுத்தார். பழைய பந்துகளிலிருந்து, மாற்றப்படும் பந்தின் நிலைக்கு மிக நெருக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கள நடுவர்களுக்கு உண்டு. ஆனால், டிம் டேவிட் நடுவர்களிடம் சென்று பந்தை தனது கையில் எடுத்து விளையாடத் தொடங்கினார்.

நடுவர்கள் வீரேந்தர் சர்மா, ஸ்வரூபானந்த் கண்ணூர் ஆகியோர் பந்தை மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து எடுக்க முயன்றும், அவர் அதை கொடுக்காமல் தன் கைகளில் வைத்துக்கொண்டதால் கோபமடைந்தனர். பந்து சரியான வடிவத்தில் இல்லை என டேவிட் சைகை மூலம் தெரிவித்ததாகப் பின்னர் தெரியவந்தது. கடைசியில் டேவிட் பந்தை திரும்பக் கொடுத்தார்.
பந்து திரும்பக் கொடுக்கப்பட்ட பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மா இதில் தலையிட்டார். அவரைத் தொடர்ந்து இருவரும் சிரித்துப் பேசினர். இச்சம்பவத்திற்குப் பிறகும், டிம் டேவிட் புன்னகையுடன் தனது எதிர்ப்பைத் தொடர்ந்தார். பந்து சரியான நிலையில் இல்லை என்பதை அவர் சைகை மூலம் ஒருவருக்கு சுட்டிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
பந்து மாற்றப்படுவதற்கு முன், ஆர்சிபி அணி 104 பந்துகளில் 212 ரன்கள் எடுத்திருந்தது (ஸ்ட்ரைக் ரேட் 203.8). பந்து மாற்றப்பட்ட பிறகு, அவர்கள் 16 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தனர் (ஸ்ட்ரைக் ரேட் 175). இப்போட்டியில் டிம் டேவிட் 16 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபில் சால்ட் 36 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அதிகபட்ச ரன்களை எடுத்தார். விராட் கோலி 38 பந்துகளில் 50 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் அதிரடியாக 53 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.