IPL 2026: விராட் கோலி மாஸ்டர் கிளாஸ்.. சிஎஸ்கே-வை காப்பாற்றிய ஆர்சிபி.. குஜராத் தோல்வி
பெங்களுரூ: ஐபிஎல் 2026 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை ஆர்.சி.பி. அணி ஏழு பந்துகள் மீதமிருக்க அடைந்து அசத்தியது. இந்தப் போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்சனின் சதம் பலம் சேர்த்தது. எனினும், ஆர்சிபியின் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் சிறப்பான அரை சதங்கள்,நடப்பு சாம்பியன்களான ஆர்.சி.பி.யை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றன.

டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்துவீச முடிவு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. சாய் சுதர்சன் ஆர்சிபி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். தனது பார்ட்னருக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஒத்துழைப்பு அளித்த ஷுப்மன் கில், சுயாஷ் ஷர்மா பந்துவீச்சில் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, ஜோஸ் பட்லர் களமிறங்கினார். அபாரமாக ஆடிய சாய் சுதர்சன், வெறும் 57 பந்துகளில் சதம் அடித்து தனது அணியை 15வது ஓவரில் 150 ரன்கள் மைல் கல்லை கடக்க உதவினார். எனினும், தமிழகத்தைச் சேர்ந்த இந்த பேட்ஸ்மேன் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் பட்லர் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 12 பந்துகளில் 19 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 10 பந்துகளில் 23 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுக்க உதவினார்கள்.
206 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆர்சிபிக்கு விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக வந்தனர். தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் கோலிக்கு ஒரு அதிர்ஷ்டம் கிட்டியது. வாஷிங்டன் சுந்தர், கோலி எளிதாக அவுட்டாகும் ஒரு கேட்சை தவறவிட்டார். இந்த 'தருணம் கோலிக்கு ஒரு புது வாழ்வை அளித்தது. சீசனின் தனது முதல் போட்டியில் ஆடிய பெத்தேல், 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ஷாருக் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் பிறகு, விராட் கோலியுடன் தேவ்தத் படிக்கல் இணைந்து, நிதானமாக ரன் சேர்த்தனர். பவர் பிளே ஓவர்களில் அணி 58 ரன்கள் சேர்க்க இந்த ஜோடி உதவியது. படிக்கல் மற்றும் கோலி இருவரும் அரை சதங்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர். படிக்கல் 55 ரன்களிலும், கோலி 81 ரன்களிலும் ரஷித் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் முறையே ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர், ஜிதேஷ் ஷர்மா 10 ரன்களுக்கும், அணி கேப்டன் ரஜத் பட்டிதார் 8 ரன்களுக்கும் ரஷித் மற்றும் மானவ் சுதார் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் நுழைய முயற்சித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ஆர்சிபி ரசிகர்கள் இடையே சற்றே பதற்றம் ஏற்பட்டது.
ஆர்சிபி அணியின் சேஸிங்கின் மத்தியில், ஒரு முக்கியமான 'ஸ்ட்ரேடஜிக் பிரேக்' எடுக்கப்பட்டது. இந்த இடைநிறுத்தம் ஆர்.சி.பி.க்கு சற்றே தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அணியினர் அவசரமாக ரன் சேர்க்க முயற்சிக்கும் போது விக்கெட்டுகளை இழந்தனர். ஜி.டி. பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை பெற்றனர். ஆர்சிபிக்கு ரொமேரியோ ஷெஃபர்ட் களமிறங்க காத்திருந்தார், மேலும், க்ருனால் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் பேட் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனாலும், 27 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் ஆர்சிபி பக்கமே இருந்தது.
பின்னர், மானவ் சுதார் பந்துவீச்சில் 15.3வது பந்தில், ரஜத் பட்டிதார் மிட்விக்கெட் திசையில் அடிக்க முயன்று எக்ஸ்ட்ரா கவர் திசையில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆர்.சி.பி.யின் நம்பிக்கையை சற்றே அசைத்தது. இதற்குப் பிறகு, டிம் டேவிட் களமிறங்கினார். ககிசோ ரபாடா வீசிய 16.5வது ஓவரில், டிம் டேவிட் "டாப் எட்ஜ்" அடித்தாலும், அது சிக்ஸ்ராக மாறியது. இது ஆர்.சி.பி.யின் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது. 16 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி. 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
மானவ் சுதார் ஓவரில் க்ருனால் பாண்டியா ஒரு பவுண்டரியை அடித்தார், இறுதியில் டிம் டேவிட் 10 ரன்களுடனும், க்ருனால் பாண்டியா 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து, ஏழு பந்துகள் மீதமிருக்க ஆர்சிபி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றி ஆர்சிபி பிளேஆஃப் வாய்ப்புகளை வலுப்படுத்தியது.
குஜராத் டைட்டன்ஸ் சாய் சுதர்சனின் அற்புதமான சதத்தை வீணடித்தது, இதன் மூலம் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. இதனால் குஜராத் அணி 6 புள்ளிகளுடன் சிக்கி கொள்ள, சிஎஸ்கேவை முந்தும் வாய்ப்பை தவறவிட்டது.


Click it and Unblock the Notifications