Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மது அருந்துவதை சுத்தமா நிறுத்திவிட்டேன்.. இனி 150 சதவீதம் பங்களிப்பேன்.. சாஹல் பேச்சு

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்கும் யுஸ்வேந்திர சஹால், தனது உடல் தகுதியை மேம்படுத்தும் நோக்கில் மது அருந்துவதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கோப்பையைத் தவறவிட்ட நிலையில், இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சஹால், "நான் மது அருந்துவதை நிறுத்தி ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. எனக்கு இப்போது 35 வயதாகிறது. நான் அதிக சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், எனது அணிக்காக 150 சதவீதம் பங்களிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஒரு மூத்த வீரராக, ஐபிஎல்-லில் உள்ளவர்கள் என்னிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றார்.

அவரது இந்த முடிவுக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் சத்தமாக கைதட்டிப் பாராட்டினார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமாகச் செயல்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இரண்டாவது முறையாக பட்டத்தை இழந்தது. இத்தோல்வி சஹால் உட்பட அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

"இறுதிப் போட்டியில் ஜான்சன் இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்பு. அவர் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயமாக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்போம்" என்று ஏபி டி வில்லியர்ஸிடம் அவர் கூறினார்.ஜான்சனின் திறமையைப் பாராட்டி சஹால், "அவர் போட்டி முழுவதும் பந்துவீசியதும், பேட்டிங்கில் சிக்ஸர்கள் அடித்ததும் அற்புதமாக இருந்தது. அவர் பந்துவீசும் விதத்தைப் பார்த்தால், எதிரணி தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இது எளிதாக இருக்காது. எங்களுக்கு மேலும் நம்பிக்கை பெருகியுள்ளது," என்றும் எடுத்துரைத்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராவதற்காக ஜான்சன் முன்னதாகவே தென் ஆப்பிரிக்கா திரும்பியிருந்தார். இது இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைப் பாதித்தது. இதனால் ஆர்.சி.பி 20 ஓவர்களில் 190 ரன்கள் குவித்து, பஞ்சாபுக்கு நெருக்கடி அளித்தது. அந்த ஆட்டத்தில் சஹால் 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

தனது சொந்த செயல்திறன் குறித்தும் சஹால் வருத்தம் தெரிவித்தார். "கேகேஆர் போட்டிக்குப் பிறகு எனக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் எனது விரல் எலும்பும் முறிந்தது. இதனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் என்னால் சரியாக லெக்-ஸ்பின் பந்துவீச முடியவில்லை. இந்த ஆண்டு, நான் முதலில் எனது உடலைக் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சஹால் தக்கவைத்துள்ளார். அவர் 174 போட்டிகளில் 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அவர்களின் முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கில், சஹால் 2026 சீசனில் வலுவான பங்களிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, March 19, 2026, 6:30 [IST]
Other articles published on Mar 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+