
ஜாம்பவான்கள் மிஸ்சிங்
புதுமுகங்கள், மாங்கு மாங்கென்று அடிக்கும் ஆட்டத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் ரசிகர்களுக்கு, ஜாம்பவான்களின் நேர்த்தியான மட்டை வீச்சு மற்றும் பவுலிங் திறமையை பார்க்க வாய்ப்பு கிடைப்பதில்லை.

சச்சின்-வார்னே கூட்டணி
இக்குறையை போக்க மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாம்பவான் ஸ்பின்னர் ஷேன் வார்னே இருவரும் இணைந்து திட்டம் வகுத்துள்ளனர். இதன்படி, மாஜி ஜாம்பவான் வீரர்களுக்காக பிரத்யேக டி20 போட்டிகளை நடத்த இவ்விரு வீரர்களும் திட்டம் வகுத்துள்ளனர்.

28 வீரர்கள்
இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சச்சின், வார்னே, கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், மெக்ராத், பிரெட் லீ, ஜேக் கல்லீஸ், நில் மெக்கன்சி, ஆட்ர்டூ பிளிண்டாப் உள்ளிட்ட 28 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

அமெரிக்காவில்
அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 15 டி20 ஆட்டங்கள் ஆட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ஆட்டம் தொடங்கும். அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

ஊதியம்
வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இந்தியாவை சேர்ந்த எஸ்ஸல் குரூப், ஐசிசிக்கு போட்டியாக ஒரு கிரிக்கெட் அமைப்பை உருவாக்க முயலுவதாக தகவல்கள் வெளிவரும் இந்த சூழ்நிலையில், சச்சின்-வார்னே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











