வீரர்கள் முன்னிலையில்
போட்டி முடிந்ததும் கோபத்துடன் பாங்கரிடம் வந்த பிரீத்தி ஜிந்தா அவருடன் சரமாரியாக வாக்குவாதம் செய்துள்ளார். வீரர்கள் முன்னிலையில் பாங்கரை விமர்சித்துள்ளார். வேலையை விட்டு நீக்க நேரிடும் என்றும் பிரீத்தி கூறியதாக கூறப்படுகிறது.
நெசமாத்தான்
ஆனால் இப்படி நடக்கவில்லை என்று பிரீத்தியும், பாங்கரும் மறுத்து விட்டாலும் கூட, நடந்தது உண்மைதான் என்று அந்த சம்பவத்தை நேரில் பார்த்த நான்கு பேர் கூறியுள்ளதாக மும்பை மிர்ரர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பயிற்சியாளர்தான் காரணம் -பிரீத்தி
அக்சர் படேலுக்கு முன்னதாக பர்ஹான் பஹர்தீனை பேட் செய்ய அனுப்பிய முடிவு பிரீத்திக்குப் பிடிக்கவில்லையாம். பயிற்சியாளரின் தவறான முடிவுகள்தான் தோல்விக்குக் காரணம் என்று பிரீத்தி விமர்சித்தாராம்.
கெட்ட வார்த்தை வேற
பிரீத்தி பேசும்போது நான்கு எழுத்தில் வரும் ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினாராம். மேலும் வேலையை விட்டு தூக்கிருவேன் என்று பாங்கரைப் பார்த்து அடிக்கடி அவர் மிரட்டியதால் வீரர்களே அதிர்ச்சியுடன் இருந்தனராம்.
எதிர்த்து யாருமே பேசலை
பிரீத்தி அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே இருக்க, யாருமே அவருக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசவில்லையாம். பாங்கரோ பரிதாபமாக நின்று கொண்டிருந்தாராம்.
ரொம்பக் கேவலம்
பிரீத்தியின் இந்த செயல் மிகவும் கேவலமானது, ஒரு அணியின் உரிமையாளர் போல அவர் நடந்து கொள்ளவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முகம் சுளித்தபடி கூறுகிறார்கள்.