மும்பை: அடுத்த ஐபிஎல் சீசன் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், 8 அணிகள் ஆடும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார் ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் ராஜீவ் சுக்லா.
சூதாட்ட புகாரை தொடர்ந்து, அடுத்த இரு ஆண்டுகளுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஐபிஎல் போட்டிகள் வழக்கம்போல நடைபெறுமா, அப்படியே நடந்தாலும், 8 அணிகளுக்கு பதிலாக 6 அணிகள்தான் விளையாட்டில் பங்கேற்குமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைக்கு பிறகு இன்று முதல் முறையாக வாய் திறந்துள்ளார் ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் ராஜீவ் சுக்லா. அவர் கூறியதாவது: ஐபிஎல் 9வது சீசனும் வழக்கம்போல நடக்கும்., அது 6 அணிகள் ஆட்டமாக இருக்காது. அடுத்த ஐபிஎல் சீசனில் 8 அணிகளை எப்படி ஆட வைப்பது என்பது குறித்து, பிசிசிஐ திட்டம் வகுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.