
ஃபிளமிங் ஐடியா
எனினும் அணி தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தொடக்க வீரராக கான்வேவை தேர்வு செய்தது பயிற்சியாளர் பிளமிங் கொடுத்த ஐடியா தான் என்று கூறியுள்ளார். கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பிக்கை கூறினார்.

ஏமாற்றம்
எனினும் சென்னை அணியின் நட்சத்திரமாக விளங்கிய டுபிளஸிஸ் மற்றும் ஷர்துல் தாக்கூரை அணியில் மீண்டும் எடுக்க முடியாதது பெரும் ஏமாற்றத்தை தருவதாக காசி விஸ்வநாதன் கூறினார். ஏலத்தில் எடுக்க எவ்வளவு முயற்சித்தும் அவர்களை மீட்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

தோனி இருக்க பயமேன்
மெகா ஏலத்தில் இப்படி ஒரு அணியை தேர்வு செய்த பெருமை எங்கள் கேப்டன் தோனிக்கும், பயிற்சியாளர் பிளமிங்கிற்கே சேரும் என்று காசி விஸ்வநாதன் கூறினார்.சென்னை அணி குறித்து என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கவலைப்பட தேவையில்லை, அனைத்தையும் தோனி பார்தது கொள்வார் என்று தெரிவித்தார்.

ஒரு குறை
எனினும் சென்னை அணியில் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் அளவிற்கு எந்த ஒரு வேகப்பந்துவீச்சாளரும் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதே போன்று ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஒர அனுபவ வேகப்பந்துவீச்சாளர் சென்னை அணியில் இல்லை. கடந்த சீசன்களில் சாம் கரண் இருந்தது போன்ற ஒரு இளம் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது ஒரு ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications











