
யார் எதிர்க்கிறார்கள்?
இதனிடையே, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. சரி ரெய்னா, ரசிகர்களும், டுபிளஸிஸ் ரசிகர்கள் தான் அந்த ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்கிறார்கள் என்று பார்த்தால், தமிழ் அமைப்புகள் தான் இதற்கு பின் உள்ளனர்.

என்ன காரணம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகீஷ் தீக்சணா என்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளரை ஏலத்தில் தேர்வு செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை நாட்டை சேர்ந்த வீரருக்கு ஏன் வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்று கூறி, தமிழ் அமைப்புகள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மிரட்டல்
தீக்சனாவை அணியிலிருந்து நீக்கவில்லை என்றால் சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் தமிழகத்தில் போட்டியை நடத்த விட மாட்டோம் என்ற தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அமைப்புகளின் இந்த எச்சரிக்கையால் சிஎஸ்கே அணி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை வீரர்களை தேர்வு செய்யாமல் இருந்தது.

வரலாறு
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தும் போது இலங்கையை சேர்ந்த யாரும் ஆட்டத்தில் இருக்க கூடாது என்றும், அப்படி இருந்தால் பாதுகாப்பு தர முடியாது என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால் பல ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே மீண்டும் ஒரு இலங்கை வீரரை எடுத்துள்ளதால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











