துபாய் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான ஏலம் இன்று துபாயில் தொடங்கியது. இந்த ஏலத்தில் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரோமன் போவெல் ஏல மேடைக்கு வந்தார். அவருடைய அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அவருடைய பெயர் வந்த உடனே கே கே ஆர் அணி அடிப்படை விலைக்கு கேட்டது. இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கடும் போட்டியாக வந்தது. இதை அடுத்து கடும் போட்டி இரு அணிகளுக்கும் ஏற்பட்டது.

நீயா நானா என்று இருவரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொள்ள ரோமன் போவெல் விலை கடுமையாக உயர தொடங்கியது. இந்த இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டது மற்ற அணி யாரும் இந்த ஏலத்தில் உள்ளே ஆர்வம் காட்டவில்லை. இதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு கோடியே 40 லட்சம் ரூபாய் வரை சென்றது. இதனால் கொல்கத்தா அணி ஏலத்திலிருந்து பின் வாங்கியது.
இதை அடுத்து முதல் வீரராக ரோமன் போவெலை ராஜஸ்தான் அணி தட்டி சென்றது. இதனை அடுத்து தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் ரோமன் பொவெலை ஏழுமலைக்கு வந்தது ஆனால் அவரை எந்த அணியும் வாங்க முன் வராததால் அவர் நடப்பு மினி ஏலத்தில் முதல் வீரராக விற்கப்படாத வீரர்கள் பட்டியில் இணைந்தார்.
ஏலம் இறுதியில் விற்கப்படாத வீரர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும். இதே போன்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புருக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியது. ஹாரி புருக்கை வாங்க டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால் இவரை மீண்டும் வாங்க ஐதராபாத் ஆர்வம் காட்டவில்லை.