
ஆரம்பமே அதிர்ச்சி
ஆனால் போட்டி இன்னும் முடியவில்லை என்று நினைத்த கேகேஆர் வேகப்பந்துவீச்சாளர்கள் தக்க பதிலடி தந்தனர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரை கண்டதுமே ஆர்சிபி வீரர்கள் பதறி போக, ஆட்டத்தின் 3வது பந்திலேயே ஆர்சிபியின் தொடக்க வீரர் அனுஜ் ராவத் டக் அவுட்டாகி வெளியேறினார்.

உமேஷ் யாதவ்
இதன் பின்னர் அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஆர்சிபி கேப்டன் டுபிளஸி விக்கெட்டை டிம் செளதி கழற்றினார். இதனால் பெரும் நெருக்கடி ஆர்சிபி அணிக்கு ஏற்பட்டது. இதனால் விராட் கோலி காப்பாற்றுவார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விராட் கோலியின் வழக்கமான குறையை வைத்தே காலி செய்தார் உமேஷ் யாதவ்.

அதே மாதிரி
விராட் கோலி கவுண்டர் அட்டாக் செய்ய முயன்றதை அறிந்த உமேஷ் யாதவ், அவரின் குறையாக 6வது லைன் ஸ்டம்பில் பந்துவீச, அதனை அடிக்க முயன்று விராட் கோலி ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்த முறையை கண்டு, கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் விரக்தி அடைந்தனர்.

49 வரலாறு
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி ஒரு சோகமான சாதனையை படைத்தது. அதாவது 49 ரன்களில் அந்த அணி சுருண்டது. அதற்கும், இதற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் விளையாடிய கொல்கத்தா ஆல் அவுட் ஆனது. திரும்ப பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி 49 ரன்களில் சுருண்டது. தற்போது அதே போல் கொல்கத்தா ஆல் அவுட் ஆக, ஆர்சிபி அணியும் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அந்த கண்டத்தை தாண்டியது.


Click it and Unblock the Notifications











