சஞ்சுவின் தவறான முடிவு
இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியால் ரன்களை அடிக்க முடியாது என ஏற்கனவே வல்லுநர்கள் கூறியிருந்தனர். 2வது பேட்டிங் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் எனக்கூறுகின்றனர். ஆனால் சஞ்சு சாம்சன் ரிஸ்க் எடுக்கும் வகையில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ஏமாற்றம்
இதற்கேற்றார் போன்றே சஞ்சு சாம்சன் நல்ல அடி வாங்கினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி அதிரடி காட்டினர். குஜராத் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஆனால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித் கான் ஆகியோர் அட்டகாசமான கம்பேக் கொடுத்தனர்.
பொறுப்பான கேப்டன்
தொடர்ந்து பவுன்சர்களாக வீசி வந்த ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு கொண்டு சென்றார். இதனால் ஜாஸ் பட்லர் 39 ரன்களுக்கும், கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களுக்கும், சிம்ரான் ஹெட்மெயர் 11 ரன்களுக்கும் என ஹர்திக் பாண்ட்யா விக்கெட் எடுத்தார். இதே போல துணைக்கேப்டன் ரஷித் கானும் பொறுப்பை சுமந்தார். அவரின் ஓவரில் தேவ்தத் பட்டிக்கல் அவுட்டானார். எனினும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை.
மொத்த ரன்கள் என்ன
மொத்தமாக 4 ஓவர்களை வீசிய ஹர்திக் பாண்ட்யா 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போல ரஷித் கான் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மற்ற பவுலர்களில் ஷமியை தவிர முழுவதுமாக 4 ஓவர்களை வீசவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.