ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சி
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறாமல் இருந்த நிறைவு நிகழ்ச்சி இந்தாண்டு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் சுமார் 1 லட்சத்து 20 பார்வையாளர்கள் இந்த போட்டியை நேரில் பார்க்க வரவுள்ளனர். முக்கிய விருந்தினர்களாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
கலை நிகழ்ச்சிகள்
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், ரன்வீர் சிங் ஆகியோர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளனர். ஐபிஎல் தொடர் 15 ஆண்டுகள் நிறைவு மற்றும் இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர கிரிக்கெட் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக இந்தியாவின் முன்னாள் கேப்டன்கள், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போட்டி நேரங்கள்
நிறைவு நிகழ்ச்சியானது இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது. சரியாக 45 நிமிடங்கள் வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சியால் போட்டியின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது டாஸ் 7.30 மணிக்கு போடப்பட்டு, ஆட்டம் 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
பலத்த பாதுகாப்பு
பல முக்கிய புள்ளிகள் இந்த போட்டியை காண வருவதால், அகமதாபாத் நகரத்தை சுற்றியும் 6000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மைதானத்திற்குள் மட்டுமே சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபவார்கள் எனத் தெரிகிறது.