மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் களத்தில் எப்போதுமே ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். எதிரணி வீரர்களிடம் எப்போதுமே கோபத்துடன் நடந்து கொள்ளும் கம்பீர் களத்தில் சிரித்ததை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.
இதுபோன்று பேட்டிங்கில் கம்பீர் பல முக்கிய இன்னிங்ஸ் ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். ஆனால் அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்டு இருக்கும் கம்பீர் தற்போது பாஜகவில் இணைந்து டெல்லியில் எம்பி யாக இருக்கிறார்.
