
கபில்தேவ் கேட்ச்
அப்போது பந்து ஆகாயத்தில் பறந்து சென்றது. அப்போது பவர் பிளே என்பதால் வீரர்கள் அனைவரும் உள் வட்டத்தில் தான் நின்றனர். இதனால் நிச்சயம் பவுண்டரி இல்லை சிக்சர் என ரசிகர்கள் நினைத்தனர். அப்போது இளம் வீரர் சுப்மான் கில், பந்தை கண்டதும் கபில் தேவ் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஓடியது போல் பின்நோக்கி ஓடினார்.

பாயந்து பிடித்தார்
ஆனால் பந்து அப்போதும் அவர் கைக்கு எட்டாது என்று உணர்ந்த சுப்மான் கில், அப்படியே பறவை போல் பறந்து கேட்ச் பிடித்தார். இதனை கண்டதும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஓடி வந்து சுப்மான் கில்லை பாராட்டினர். சுப்மான் கில் அந்த கேட்சை விட்டுவிடுவார் என நினைத்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஆச்சரியத்தில் உரைந்தனர்.

பதிலடி
ஐபிஎல் தொடர் தொடங்கி 3 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பேட்டிங், பந்துவீச்சு , ஃபில்டிங் என வீரர்கள் கலக்கி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் இப்படி கேட்ச் பிடித்து அசத்துவார்கள். இந்திய வீரர்கள் கைக்கு வரும் கேட்சை கூட விட்டுவிடுவார்கள் என்ற கேலி கிண்டல் ஒரு காலத்தில் இருந்தது.
பழைய காலம்
ஆனால் , அது எல்லாம் பழைய காலம் என்று சொல்லி வைத்து அடித்து வருகிறார்கள் இந்திய வீரர்களின் இளம் படை. முதல் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ஜாக்சன் அசத்த, இன்று ஃபில்டிங்கில் சுப்மான் கில் அசத்தினார். காயத்திலிருந்து குணமடைந்துள்ள சுர்மான் கில் 2018ஆம் ஆண்டு அண்டர் 19 உலககோப்பை தொடரில் விளையாடி அசத்தி, சீனியர் அணியில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











