புதுசு கண்ணா.. புதுசு!! சிஎஸ்கேவின் 25 பேர் கொண்ட படை.. தோனியில் அசத்தல் தேர்வு.. முழு பட்டியல் இதோ
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச்சிறப்பான வீரர்களை பட்டியலிட்டு தூக்கியுள்ளது.
2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் நாளில் சற்று நிதானம் காத்த சிஎஸ்கே அணி 2வது நாளில் வீரர்கள் வேட்டை நடத்தியது.
இன்று மட்டும் ஏலத்தில் 17 வீரர்களை தேர்வு செய்ததன் மூலம் அந்த அணி மொத்தமாக 25 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

சிஎஸ்கே திட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே கேப்டன் தோனி, தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட், ஆல்ரவுண்டர் மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர்த்து மீதமிருந்த ரூ. 48 கோடியை வைத்து வீரர்களை தேர்வு செய்யவேண்டிய சூழலில் சிஎஸ்கே களமிறங்கியது.

நேற்றைய நாள் முடிவு
அந்தவகையில் முதல் நாளான நேற்று பொறுமையாக இருந்து மற்ற அணிகளின் தேர்வுகளை பார்வையிட்டது. இதன் விளைவாக தீபக் சஹார், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டுவைன் பிராவோ, கே.எம்.ஆசிஃப், துஷார் தேஷ்பாண்டே என 6 பேரை மட்டுமே ஏலம் எடுத்து வைத்திருந்தது.

திடீர் திருப்பம்
இந்நிலையில் இன்று மதியத்தில் இருந்து திடீரென அடுத்தடுத்து வீரர்களை குவித்தது. அதுவும் குறைந்த விலையில் உலகின் முன்னணி வீரர்களையும் சென்னை அணி சுருட்டியது. குறிப்பாக நியூசிலாந்தின் அதிரடி வீரர் டேவான் கான்வேவை ஓப்பனிங் வீரராக களமிறக்க ரூ. 1கோடிக்கு எடுத்துள்ளது.

சிஎஸ்கே அணி விவரம்
ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ராகுல் சஹார், கிறிஸ் ஜோர்டன், ஜகதீசன், ஆடம் மில்னே, மிட்செல், சாண்ட்னர், டுவைன் ப்ரிடோரியஸ், டெவோன் கான்வே, பகத் வர்மா, ஹரி, நிஷாந்த், பிரஷாந்த், முகேஷ் சௌத்ரி, அன்ஷு சேனாதிபதி, சிமார்ஜீத், ராஜ்வர்தன், தீக்ஷனா, ஷிவம் தூபே, துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப்


Click it and Unblock the Notifications