
எதிர்காலம்
சென்னை அணி எப்போதுமே தங்களது அணியில் விளையாடிய வீரர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கும். தற்போதும் அதே ஸ்டைலை தான் பின்பற்றி இருக்கிறார்கள். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணி என்ற எதிர்காலத்தை பார்த்தால் பிராவோ, ராயுடு, உத்தப்பாவுக்கு செலவு செய்த பணத்தை, படிக்கல், பிரவீஸ், ஷாரூக்கான் போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்து இருக்கலாம்.

பழைய அணி
தற்போது கைவசம் சுமார் 20 கோடி சென்னை அணியிடம் உள்ள நிலையில், இன்றாவது 2 அல்லது 3 இளம் வீரர்களை குறிவைக்கலாம். ஆனால், இந்த சீசனுக்கான கிட்டத்தட்ட பழைய அணியையே சிஎஸ்கே தயார் செய்துள்ளது.சொல்ல போனால் பிளேயிங் லெவன் நமக்கு கிட்டதட்ட ரெடி. இதனை தான் தோனியும் விரும்பி இருக்கிறார்.

அணி விவரம்
தொடக்க வீரராக ராபின் உத்தப்பா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கலாம். நடுரிசையில் மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி ஆகியோர் ரெடியாக உள்ளனர், ஆல் ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் பிராவோ, தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளராக ஆசிஃப், துசார் தேஷ்பாண்டே ஆகியோர் உள்ளனர்.

இன்றைய பிளான்
இதனால் இன்றைய ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், சுழற்பந்துவச்சாளர்கள் என ஒரு 6 வீரர்களை எடுத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெடி. நாம் ஏற்கனவே சொன்னது போல் 70 சதவீதம் சீனியர்கள், 30 சதவீதம் ஜூனியர்கள் என்ற அளவில் தான் அணியை தயார் செய்ய உள்ளது சிஎஸ்கே,

தயாரான அணி
தற்போதைய அணியின் பேட்டிங் வரிசை 1, ராபின் உத்தப்பா, 2.ருத்துராஜ் கெய்க்வாட், 3, மொயின் அலி, 4, அம்பத்தி ராயிடு, 5. தோனி, 6, ஜடேஜா, 7, பிராவோ, 8, தீபக் சாஹர், 9, ஆசிஃப். 10, துசார் தேஷ்பாண்டே , விதிப்படி ஒவ்வொரு அணியும் 18 வீரர்களை குறைந்தபட்சம் தேர்வு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications











