“என்ன ஆனாலும் அவர் வேணும்”.. சிஎஸ்கேவுக்கு தோனி போட்ட அன்பு கட்டளை..ஐபிஎல் ஏலத்தில் கூடிய பரபரப்பு!
கொச்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு வீரரை மட்டும் எப்படியாவது, என்ன தொகை கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும் என தோனி நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் இறுதிகட்டத்தில் உள்ளன.
அனைத்து அணிகளும் தங்களது தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட சூழலில், அவர்களுக்கு மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்ற வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.

ஐபிஎல் மினி ஏலம்
இதில் மிக முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே கடந்தாண்டு மோசமான தோல்விகளால் 9வது இடத்தை பிடித்திருந்தது. எனவே இந்த முறை தோனியின் கடைசி தொடராக இருக்கலாம் என்பதால் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என பலகட்ட திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தோனியின் கோரிக்கை
இந்நிலையில் ஒரே ஒரு வீரருக்கு மட்டும் தோனி டிமாண்ட் செய்திருப்பதாக தெரிகிறது. அதாவது சிஎஸ்கேவின் கடைக்குட்டியான சாம் கரண் தான் அது. சென்னை அணிக்காக 2020, 2021 ஆகிய சீசன்களில் மொத்தம் 23 போட்டிகளில் விளையாடிய அவர் ஆச்சரியம் தரும் வகையில் 2022ம் ஆண்டு தொடரை புறகணித்தார். ஒரு முக்கிய காரணத்திற்காக இந்தாண்டு கொண்டு வர தோனி திட்டமிட்டுள்ளார்.

முக்கிய காரணம்
சென்னை அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட டுவைன் பிராவோ ஓய்வை அறிவித்துவிட்டார். அவரின் இடத்தை சரியாக நிரப்பக்கூடிய வீரராக பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் போன்றோர் இருப்பார்கள். ஆனால் சாம் கரணுக்கு குறைந்த வயது தான். அவரின் ஃபார்மும் சிறப்பாக உள்ளதால், இன்னும் சில வருடங்களுக்கு அவர் பயன்படுவார் என்ற காரணத்திற்காக அவருக்கு தோனி குறிவைத்துள்ளார்.

அசுர பலம்
இங்கிலாந்து வீரரான சாம் கரண் தற்போது அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து கோப்பையை வெல்ல அவரும் முக்கிய காரணமாகும். எனவே அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. இவர் சிஎஸ்கேவுக்கு திரும்பினால், அணியின் பலம் ஏகபோகத்திற்கு கூடும்.


Click it and Unblock the Notifications