மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக அணியை விட்டு வெளியேற விரும்புவதாக தன்னிடம் தெரிவித்ததாக, சக அணி வீரர் நிதிஷ் ராணா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம்சன், 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கி, 2021 முதல் அணியை வழிநடத்தி வருகிறார்.
இருப்பினும், அவர் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு உடன் இருந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், ஜோஸ் பட்லரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது குறித்து சாம்சன் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய நிதிஷ் ராணா, "சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த வீரர் மற்றும் கேப்டனாக விளங்கினார்.

அவரது முடிவு தனிப்பட்டது. ஆனால் அது அணியின் எதிர்கால திட்டங்களை மறு ஆய்வு செய்ய வைத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால், அது அணிக்கு புதிய திசையை வழங்கலாம்," என்று ராணா கூறினார். இந்த நிலையில்,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம்சனின் எதிர்காலம் குறித்து மூன்று கருத்துகள் நிலவுகின்றன.
அதில், ஒரு பிரிவு ரியான் பராக் கேப்டனாக வேண்டும் என்று ஆதரிக்கிறது. மற்றொரு பிரிவு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆதரிக்கிறது. மூன்றாவது பிரிவு சாம்சன் தொடர வேண்டும் என்று விரும்புகிறது.சாம்சன், ஐபிஎல் 2025 சீசனில் காயம் காரணமாக சில போட்டிகளைத் தவறவிட்டார். இதனால் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இந்த நிலையில், சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளுக்கு மாற விரும்புவதாக வதந்திகள் பரவின. இருப்பினும், சிஎஸ்கே அணியின் நிர்வாகி ஒருவர், சாம்சனுடனான பேச்சு வெறும் வதந்தி என்று மறுத்துள்ளார். இந்த தருணத்தில் தான், ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணியின் ஏற்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து பதவி விலகினார்.
இதனை அடுத்து, முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா, ராஜஸ்தான் ராயல்ஸின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், சாம்சன் கேப்டனாக தொடருவார் என்று அணி நிர்வாகம் முழு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சாம்சனின் எதிர்காலம் குறித்த இந்த விவாதங்கள், ஐபிஎல் 2026-ஐ நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.