ராயல்ஸ் சாதனை
அதுவும் இல்லாமல் பிளே ஆப் போட்டிகளில் கடைசி ஓவரில் 16 ரன்களை வெற்றிக்கரமாக குஜராத் அடித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு கடந்த சிஎஸ்கே அணி டெல்லிக்கு எதிராக கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்ததே சாதனையாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் தான் ராஜஸ்தான் அணி கோட்டை விட்டது.
ஃபில்டிங் தவறு
பிரசித் கிருஷ்ணா கடைசி ஓவரில் தனது முதல் பந்தை டேவிட் மில்லருக்கு வீச இருந்தார். அப்போது, சஞ்சு சாம்சன், அனைத்து ஃபில்டர்களையும் மில்லருக்கு ஆஃப் சைடில் நிறுத்தினார். இதனால் லெக் சைடில் எந்த ஒரு ஃபில்டரும் நிறுத்தப்படவில்லை. இப்படி ஃபில்டரை நிறுத்தினாலே, பந்து ஓயிட்டாக தான் வரும் என்று பேட்ஸ்மேன்களுக்கு கணிக்க முடியும்.
ஹாட்ரிக் சிக்சர்
ஆனால், பிரசித் கிருஷ்ணாவோ,பந்தை சரியாக லேக் சைடில் அடிப்பதற்கு ஏதுவாக அல்வா போன்ற பந்தை வீசினார். இதனை பயன்படுத்தி கொண்டு மிட் விக்கெட் பகுதியில் மில்லர் சிக்சர் அடித்தார். இதனால் பிரசித் கிருஷ்ணாவின் உத்வேகம் கலைந்தது. 2வது பந்துக்கு இரண்ட புறமும், எல்லைக்கோட்டில் ஃபில்டர்கள் நிற்க, அந்த பந்தும் சிக்சருக்கு பறந்தது. இதே போன்று மூன்றாவது பந்தையும் எந்த நெருக்கடியும் இல்லாமல் சிக்சருக்கு அடித்தார் மில்லர்.
விமர்சனம்
இது குறித்து பேசிய சைமன் டுல், முதல் பந்துக்கு நிறுத்தப்பட்ட ஃபில்டிங் செட் ஆப் சரியானது தான் ஆனால் பந்துவீச்சாளர் பிளானை தவறாக நடைமுறைப்படுத்தி விட்டதாக கூறினார். இதற்கு பதில் அளித்த இயன் பிஷப், ஒரு வேலை ராஜஸ்தான் வகுத்த பிளானை நடைமுறைப்படுத்தும் வகையில் பந்துவீச பிரசித் கிருஷ்ணாவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இந்த சூழ்நிலையில், பிளானை விட, நமது பலத்திற்கு ஏற்ப தான் பந்துவீச வேண்டும் என்று கூறினார்.