
குருநாத், ராஜ்குந்த்ரா
மேலும் பெட்டிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோரும் சிக்கினர்.

நிரபராதிகள்- நீதிபதிகள் கருத்து
ஆனால் கிரிக்கெட் வாரியம் சார்பில் விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் இவர்களுக்கும் பிக்சிங்குக்கும் தொடர்பும் இல்லை என்று கூறியது.

பீகார் சங்கம் வழக்கு
இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஐ.பி.எல். பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான விசாரணை கமிஷனை உச்சநீதிமன்றம் அமைத்தது.

முகுல் முட்கல் கமிட்டி
கடந்த 4 மாதங்களாக நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள், போலீசார் ஆகியோரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

170 பக்க விசாரணை அறிக்கை
4 மாத விசாரணைக்குப் பின்னர் இன்று தமது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் முன்பு முகுல் முட்கல் குழு தாக்கல் செய்தது. இந்த விசாரணை அறிக்கை 170 பக்கங்கள் கொண்டது.

குருநாத் பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மை
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்றும் ரகசிய தகவல்களை பரிமாறினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கூடுதல் விசாரணை அவசியம்
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா மீதான புகார் குறித்து கூடுதல் விசாரணை தேவை என்றும் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்வைஸ் செய்யனும்..
அத்துடன் மூத்த வீரர்களான டெண்டுல்கர், டிராவிட் போன்றோர் இளம் வீரர்களுக்கு இந்த விவகாரத்தில் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் விசாரணை கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. 7வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் பிக்சிங் விசாரணை அறிக்கை தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











