
இடைக்கால தலைவராக கவாஸ்கர்
இந்த அறிக்கை மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 7வது ஐ.பி.எல். போட்டியின் போது கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கரை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 3 அணிகளுக்கு தொடர்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ஆயல்ஸ் அணிகளைத் தவிர மேலும் 3 அணிகளுக்கு பிக்ஸிங்கில் விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதாம்.

மேலும் 12 வீரர்களுக்கும் தொடர்பு
அதேபோல் பிக்ஸிங்கில் சிக்கிய 6 வீரர்கள் அல்லாமல் மேலும் 12 அல்லது 13 வீரர்களுக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.

ஏப்ரல் 16-ல் விசாரணை
இந்த அறிக்கை மீது வரும் 16-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











