
அட்டவணை வெளியீடு
வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எஞ்சிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
நாக் அவுட் அட்டவணை
பிசிசிஐ, நிர்வாகிகள் கூட்டத்தில், லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிட்டது. மே 5ம் தேதி வரையிலான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாக் அவுட் சுற்றுப் போட்டிக்கான அட்டவணையை இன்னும் வெளியிட வில்லை.

மே 12ம் தேதி இறுதிப்போட்டி
இந்நிலையில் சென்னையில் வரும் மே 12ல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பைனல் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதேபோல நாக் அவுட் போட்டியின் முதல் குவாலிபயர் போட்டி மே 7ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

வெளியேற்றுதல் சுற்று
எலிமினேட்டர் போட்டி மே 8ம் தேதியும் நடைபெறும் என்று தெரிகிறது.மே 10ம் தேதி 2வது குவாலிபயர் போட்டியும் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாகப்பட்டினம் தயார்
தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டிகள் வேறு இடத்தில் நடத்த முடியாத நிலை உருவானால், விசாகப்பட்டினத்தை தயாராக வைத்திருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் ஐபிஎல் ஜூரம் இப்போதே தொடங்கிவிட்டது என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications