For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஈரான் இஸ்ரேல் போரில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் ரஹீம்.. சமூக வலைத்தளத்தில் கண்ணீர் பதிவு

ஜெட்டா: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் கடுமையான விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வங்கதேசத்தின் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரும் விக்கெட் கீப்பர்-பேட்டருமான முஷ்பிகுர் ரஹீம், தனது உம்ரா யாத்திரையை முடித்துக்கொண்டு ஜெட்டாவில் இருந்து திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்.

ஏர் இந்தியா மற்றும் எமிரேட்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பல பயணிகள் இதனால் அவதிப்பட்டுள்ளனர். முஷ்பிகுர் ரஹீம் தனது உம்ரா யாத்திரையை முடித்துக்கொண்டு துபாய் வழியாக வங்கதேசம் திரும்ப முயன்றபோது, ஜெட்டாவில் சிக்கிக்கொண்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த இராணுவத் தாக்குதல்களால், வளைகுடா வான்பகுதி மூடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கின. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 1979 முதல் ஆட்சியில் இருக்கும் இஸ்லாமியத் தலைமையை அகற்றுமாறு ஈரானிய மக்களை வலியுறுத்தினார்.

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் பலமான அணி தான்.. ஆனால் அதிக வெற்றி பெற்றது யார் தெரியுமா?IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் பலமான அணி தான்.. ஆனால் அதிக வெற்றி பெற்றது யார் தெரியுமா?

இந்த இராணுவத் தாக்குதல்கள் வளைகுடா பகுதி முழுவதிலும் வான்பகுதியை மூடுவதற்கு வழிவகுத்தன. இதன் காரணமாக எமிரேட்ஸ் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமானங்களின் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. "சில நாட்களுக்கு முன்பு உம்ரா ஹஜ்ஜுக்காக மக்கா வந்தேன்.. எனது ஹஜ்ஜை முடித்து இன்று துபாய் (எமிரேட்ஸ்) வழியாக வங்கதேசம் திரும்பிக்கொண்டிருந்தேன்," என ரஹீம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"இன்று காலை ஜெட்டாவிலிருந்து EK 0806 விமானம் மூலம் துபாய்க்குப் புறப்பட்டோம். ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடந்த போர் காரணமாக அனைத்து விமானங்களும் ஜெட்டாவிற்கே திரும்பிவிட்டன. தற்போது நானும் ஆயிரக்கணக்கான பயணிகளும் ஜெட்டா விமான நிலையத்தில் இருக்கிறோம். மற்ற வங்கதேச மக்களுடன் சேர்ந்து எப்போது, எப்படி டாக்கா செல்வோம் என்று தெரியவில்லை" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஏர் இந்தியா நிறுவனம் தனது 'X' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வளைகுடா பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. குறிப்பாக அபுதாபி, தம்மாம், தோஹா, துபாய், ஜெட்டா, மஸ்கட், ரியாத் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் ஆகிய நகரங்களுக்கான சேவைகள் தடைபட்டுள்ளன.

ஈரான் இஸ்ரேல் போர் பதற்றத்தால், டி20 உலககோப்பைக்கு சிக்கல் வருமா? ஐபிஎல் போல் ஒத்திவைக்கப்படுமா?ஈரான் இஸ்ரேல் போர் பதற்றத்தால், டி20 உலககோப்பைக்கு சிக்கல் வருமா? ஐபிஎல் போல் ஒத்திவைக்கப்படுமா?

38 வயதான ரஹீம், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின்போது, அவர் 274 போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 49 அரைசதங்கள் உட்பட மொத்தம் 7,795 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

Story first published: Sunday, March 1, 2026, 14:11 [IST]
Other articles published on Mar 1, 2026
English summary
The article reports Gulf airspace closures following US, Israel, and Iran clashes, causing widespread flight cancellations and passenger delays. Emirates and Air India suspend services to major Gulf cities, while travellers including Mushfiqur Rahim remain stranded as routes are affected.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+