ஆல்ரவுண்டர் இர்பான் பதான்
29 டெஸ்ட் ,120 ஒருநாள் மற்றும் 24 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான், பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக டி20 உலக கோப்பை இந்தியா வென்ற போது ஆட்டநாயகன் விருதை வென்றவர் இர்பான் தான். டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகள் மற்றும் 1105 ரன்கள், ஒருநாள் போட்டியில் 173 விக்கெட்டுகள் மற்றும் 1544 ரன்கள் , சர்வதேச டி20 போட்டியில் 28 விக்கெட்டுகள் மற்றும் 172 ரன்கள் என உண்மையான ஆல் ரவுண்டராக இர்பான் பதான் திகழ்ந்தார்.
ரசிகர் கோபம்
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இர்பான் பதான் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் நான் இர்பான் பதானை பார்க்கும்போதெல்லாம் தோனியையும் அவருடைய நிர்வாகத்தையும் தான் நான் சபிப்பேன். இர்ஃபான் பதான் கடைசியாக இந்தியாவுக்காக ஒரு நாள் போட்டியில் விளையாடியது அவருடைய 29 வது வயதில் என்று நினைத்தால் என்னால் நம்ப முடியவில்லை.
வாய்ப்பு வழங்கவில்லை
இர்பான் பதான் போன்ற ஒரு ஆல் ரவுண்டு கிடைக்க அனைத்து அணியினரும் காத்துக் கொண்டிருந்தனர் .ஆனால் இந்திய அணியோ ஜடேஜா மற்றும் ஸ்டுவர்ட் பின்னி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் கடைசிவரை இர்பானை சேர்க்கவே இல்லை என்று காட்டமாக விமர்சனம் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் இர்பான் பதான், அவருக்கு பதில் அளித்துள்ளார்.
இர்பான் அட்வைஸ்
உங்கள் அன்புக்கு நன்றி ஆனால் யாரையும் குறை சொல்லாதீர்கள் என்று அவருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இர்பான் பதானின் இந்த பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இர்பான் பதானுக்கு தோனி ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த காலத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.