
இடது கை வேகப் பந்துவீச்சாளர்
ஜாகிர் கானுக்கு பின் இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக ஆடியவர் இர்பான் பதான். அவருக்கு பின் இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. யாரும் தங்கள் முத்திரையை பதிக்கவும் இல்லை.

கேள்விகள்
இந்த நிலையில் நடராஜனின் வரவு இந்திய அணிக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இடது கை வேகப் பந்துவீச்சாளர் மூலம் குறிப்பிட்ட சில பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியும். அவர் இந்திய அணியில் இனி என்ன செய்யப் போகிறார்? எப்படி தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வடிவமைத்துக் கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்?
இர்பான் பதான் கூறுகையில், "நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் நிறைய செய்ய வேண்டும். அவரது ஆங்கிள், ரிதம் ஆகியவற்றை அவர் சரி செய்ய வேண்டும். அவரிடம் தொடர்ந்து ஒரே மாதிரி பந்து வீசும் திறன் உள்ளது. அவர் தன் உடலை பந்துக்கு பின் கொண்டு செல்ல வேண்டும், அப்போது தான் பந்தை பேட்ஸ்மேனுக்கு மிக அருகே கொண்டு செல்ல முடியும்" என்றார்.

முதன்மை திட்டம்
மேலும், "அவரது முதன்மை திட்டம் நாட்டுக்காக ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை ஆட வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அதற்காக அவர் தன் உடற்தகுதி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர் தன்னிடம் உள்ள திறமைகளை கொண்டே இதை செய்யலாம். போட்டிகளில் ஆட ஆட அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்வார்" என்றார் பதான்.


Click it and Unblock the Notifications











