Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?.. ரிஷப் பண்ட்-க்கு இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை - காரணம்

ராஜ்கோட்: இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை இந்திய அணி ஒரு வெற்றியும், தென்னாப்பிரிக்க அணி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

4வது டி20

4வது டி20

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 4வது டி20 போட்டி இன்று இரவு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ஓப்பனிங்கில் ருதுராஜ் ஃபார்முக்கு வந்துவிட்டார். மிடில் ஆர்டரும் ஹர்திக், தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் என நன்றாக உள்ளது. ஆனால் கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் தான் இன்னும் சொதப்பி வருகிறார்.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

வழக்கமாக அதிரடி மூலமே ரன் குவிக்கும், பண்ட்-ஐ ஸ்லோயர் பந்துகள் மூலம் ஒற்றை இலக்க ரன்களில் தென்னாப்பிரிக்க பவுலர்கள் சுருட்டிவிடுகின்றனர். இதனால் இனி அவரை நீக்கிவிட வேண்டும் என ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். இந்த தொடரில் தன்னை நிரூபித்தே தீர வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.

இர்ஃபான் அறிவுரை

இர்ஃபான் அறிவுரை

இந்நிலையில் பண்ட்-க்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய அட்வைஸை கொடுத்துள்ளார். அதில், பேட்டிங்கில் ரிஷப் பண்ட் திடீரென உறைந்துவிட்டார். இனி ப்ளேயிங் 11ல் இடம்பெற வேண்டும் என்றால் நன்றாக ஆட வேண்டும். ஏனென்றால் அணியில் ஏற்கனவே தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான் போன்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். கே.எல்.ராகுலும் இருக்கிறார். அணிக்கு வெளியில் சஞ்சு சாம்சன் காத்துள்ளார்.

என்ன தவறு செய்கிறார்

என்ன தவறு செய்கிறார்

இத்தனை போட்டிகளுக்கு மத்தியில் பேட்டிற்கு நீண்ட நாட்கள் ஓய்வு கொடுக்க கூடாது. ரிஷப் பண்ட், ஆஃப் சைட் திசைகளில் நன்கு பலத்தை பயன்படுத்தி அடிக்கிறார். அதனால் சிக்ஸர் போகிறது. ஆனால் அதே பலத்தை லெக் சைட் திசையிலும் காட்டுகிறார். லெக் திசையில் சரியான திசை கொடுத்து அடிக்க வேண்டும். இல்லையெனில் கேட்ச் தான். எனவே இதனை பண்ட் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் வாய்ப்பு கிடைக்காது எனக்கூறியுள்ளார்.

முன்னேற்றமே இல்லை

முன்னேற்றமே இல்லை

ரிஷப் பண்ட் ஒரு சிறந்த வீரர் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு 24 வயது தான் ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகள் சிறப்பாக விளையாடினால், உலக கிரிக்கெட்டில் அவரின் இடம் வேற லெவலில் இருக்கும். ஆனால் தற்போது வரை அதற்கான முன்னேற்றத்தை நான் காணவில்லை என்று இர்ஃபான் பதான் ஆதங்கமும் பட்டுள்ளார்.

Story first published: Friday, June 17, 2022, 15:09 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+