பிசிசிஐ-ன் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து வீரர்களின் மீது கவனம் திரும்பியுள்ளது. இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களை டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூறிவிட்டு, பெரிய ஃபார்மெட்களில் மட்டும் கவனம் செலுத்த அறிவுறுத்தவுள்ளது. குறிப்பாக நல்ல ஃபார்மில் உள்ள விராட் கோலிக்கு இந்த அறிவுரை கூறப்பட்டு வருகிறது.
ஓய்வுபெறுகிறாரா கோலி?
இந்நிலையில் கோலி போட்டுள்ள இன்ஸ்டா பதிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. களத்தை விட்டு வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், அதில், " அக்டோபர் 23, 2022 ( டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் போட்டி ) என்னுடைய மனதில் மிகவும் ஸ்பெஷலான தருணமாகும். என் கிரிக்கெட் பயணத்தில் அது போன்ற ஒரு உணர்வும், புத்துணர்ச்சியும் கிடைத்ததே இல்லை. அன்றைய தினம் மறக்க முடியாத ஒன்று" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் கவலை
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி ஒன் மேன் ஆர்மியாக போராடி போட்டி தான் அது. இதனை ஏன் தற்போது திடீரென பதிவிட்டுள்ளார் என்று பார்த்தால், தோனி தான் காரணமாக இருக்கிறார். தோனியும் தனது ஓய்வு அறிவிப்பை இதே போன்ற இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு புகைப்படத்தை போட்டு தான் அறிவித்திருந்தார். தற்போது கோலியும் அதே பாணியில் கூறுகிறார் என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளார்.
காரணம் என்ன
2 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்த கோலி, ஆசிய கோப்பை தொடரில் தான் கம்பேக் கொடுத்தார். அதில் தொடங்கி டி20 உலகக்கோப்பையிலும் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே பெருமையுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.