For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2025ஆம் ஆண்டில் இசான் கிஷன் கம்பேக் கொடுத்தது எப்படி? வாழ்க்கையை மாற்றிய பகவத் கீதை

மும்பை: ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்த பிறகு இந்திய அணியின் முதல் நிலை விக்கெட் கீப்பராக இசான் கிஷன் தான் இருந்தார். ஆனால், 2023 ஆம் ஆண்டில் அணியிலிருந்து விலகிய அவர், தற்போது தனது பொறுமை மற்றும் திறமையால் 2025 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்க்கண்டிற்கு வெற்றியையும், 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடத்தையும் பெற்றார்.

2023 ஆம் ஆண்டின் பிற்பகுதி அனைத்தையும் மாற்றியது. மன சோர்வைக் காரணம் காட்டி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய கிஷன், உள்ளூர் போட்டிகளைத் தவிர்க்கத் தொடங்கினார். இதனால் விரைவில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2024-க்குள் அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

Ishan Kishan

2024 இன் முற்பகுதியில், கிஷன் எந்தப் பதில் விவாதமும் செய்யாமல் அமைதியைக் கடைப்பிடித்தார். பேட்டிகளோ, பொது விளக்கங்களோ தரவில்லை. பலவிதமான கருத்துக்கள் சுற்றி வந்தபோது, அவர் அமைதியாக ஜார்க்கண்ட் கிரிக்கெட்டிற்குத் திரும்பினார். வெளிச்சத்திற்கு அப்பால், பகவத் கீதை மற்றும் தனிப்பட்ட வழக்கங்களால் மனதை நிலைப்படுத்தினார்.ஆன்மீகத்தை ஒரு உந்துசக்தியாக பயன்படுத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2024 ஐபிஎல் தொடரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 2025 ஐபிஎல் தொடரும் இஷான் கிஷனின் கம்பேக்கிற்கு வழிவகுப்பதாகத் தெரிந்தாலும், அது முற்றுப்பெறவில்லை. 2025 இன் ஆரம்பத்தில் 47 பந்துகளில் அடித்த சதம் அதிரடி ஆட்டத்தை சுட்டிக்காட்டியது.

இந்த இரண்டு சீசன்களிலும், ஐபிஎல் ஆட்டம் மட்டும் தேசிய அணியின் கதவுகளைத் திறக்காது என்பதை கிஷன் புரிந்துகொண்டார். உள்ளூர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதே முக்கியம் என உணர்ந்தார்.2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இஷான் கிஷன் ஜார்க்கண்ட் அணிக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்தார். குறுக்குவழிகளை தேர்ந்தெடுக்காமல் கடுமையாக உழைத்தார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சிறிய தொடரான புச்சி பாபு கிரிக்கெட் தொடர் வரை அவர் பங்கேற்றார். பேட்டிங் தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும், அணியின் கேப்டனாகவும் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2024 இல் இந்திய கிரிக்கெட் ஒரு கதவை மூடியிருந்தால், 2025 இல் உள்ளூர் கிரிக்கெட் அதைத் திறக்கும் திறவுகோலாக இருக்கும் என அவர் நம்பினார்.

2025 சையத் முஷ்டாக் அலி கோப்பை, இஷான் கிஷனின் மிக முக்கியமான தளமாக மாறியது. 10 இன்னிங்ஸ்களில் அவர் 517 ரன்கள் குவித்தார், அதுவும் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில். இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் என அவரது அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. ஜார்க்கண்ட் அணி வெறும் போட்டி போடும் அணிகளில் ஒன்று என்ற நிலை மாறி கோப்பையை வென்றது.

டிசம்பர் 2025 அன்று புனேவில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில், இஷான் கிஷன் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஹரியானா அணியைத் தோற்கடித்தார். ஜார்க்கண்ட் அணி தங்கள் வரலாற்றில் முதல் பட்டத்தை வென்றது. நெருக்கடியான சூழலிலும், அவரது ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது.

இறுதிப் போட்டி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, 2026 டி20 உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டது. இஷான் கிஷன் அதில் இடம்பிடித்தார். கடுமையாக உழைத்து, நமது கடமையை செய்தால் பலன் தானால் வரும் என்பது போல், இயற்கையே டி20 உலககோப்பையில் அணியின் காம்பினேஷன் முக்கியம் என கருத்தில் கொண்டு அவரை அணியில் சேர்த்தது.

நாம் வாழ்க்கையில் அடி வாங்கும் போது, நாம் எங்க தவறு செய்கிறோம். எது நல்ல பழக்க வழக்கம், என்ன செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது இசான் கிஷன் மூலம் 2025ஆம் ஆண்டிலிருந்து பாடம் கற்று கொண்டு, 2026ஆம் ஆண்டு புத்தாண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.

Story first published: Sunday, December 28, 2025, 13:19 [IST]
Other articles published on Dec 28, 2025
English summary
Ishan Kishan come back story- How Bhagavat Gita Helped him to achieve success
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+