
முதல் போட்டி
20 பேர் கொண்ட இந்திய அணியில் 6 வீரர்கள் தங்களது அறிமுக போட்டிக்காக காத்திருந்தனர். இதில் இருந்து ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய இளம் வீரர் இஷான் கிஷானுக்கு தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்ய சம்பவம்
இதில் சுவாரஸ்ய விஷயம் ஒன்றும் நடந்துள்ளது. இஷான் கிஷான் இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பிறந்தநாளன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமான 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1990ம் ஆண்டு குர்ஷாரன் சிங் தனது 27வது பிறந்தநாளன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

சூர்யகுமார்
இதே போல மற்றொரு நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவுக்கு தனது முதல் சரவதேச ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் நீண்ட நாட்களாக சர்வதேச வாய்ப்புக்காக காத்திருந்தார். பின்னர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடு வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல்போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். எனவே இன்றைய போட்டியிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை
சர்வதேச வாய்ப்புக்காக நீண்ட வருடங்களாக காத்திருந்த இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அவர்கள் இதில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











