சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சைவ உணவைத் தேடி மைதானத்தில் இருந்து வெளியேறிய கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மாவும், ரெய்னாவும் மெல்போர்ன் நகரில் இருக்கும் சில சைவ உணவகங்களுக்கு செல்லலாம்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியிலும், பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது.
பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது சைவ உணவு கொடுக்கப்படவில்லை என கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா மதிய வேளையில் மைதானத்தில் இருந்து வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 3வது டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளன. வரும் 26ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது.
மெல்போர்ன் மைதானத்திலும் சைவ உணவு கிடைக்காவிட்டால் இஷாந்தும், ரெய்னாவும் சுவையான சைவ உணவு சாப்பிட நகரில் உள்ள சில உணவகங்களின் பெயர் வருமாறு,
1. ஆங்கன்
2. ரெட் பெப்பர்
3. தந்தூரி டென்
4. ஹார்ன் ப்ளீஸ்
5. டோன்கா
6. ப்ளோரா
7. டூ ஃபேட் இன்டியன்ஸ்