பிர்மிங்ஹாம் : தற்போது நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இஷாந்த் சர்மாவின் விக்கெட் கொண்டாட்டத்திற்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. போட்டியின் மூன்றாம் நாளின் போது, இங்கிலாந்தின் டாவிட் மாலன் விக்கெட்டை எடுத்த பிறகு கொண்டாடினார், இஷாந்த் சர்மா. அப்போது ஐசிசி விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இஷாந்த் சர்மா அருமையாக பந்து வீசினார். இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். எனினும், இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
