
நெருக்கடியில் இஷாந்த்
கடந்த ரஞ்சி கோப்பை தொடரின்போது காயம் பட்ட இஷாந்த் சர்மா தொடர்ந்து நியூசிலாந்து தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் முழுமையாக பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு இடையிலேயே திரும்பினார். இந்நிலையில் இந்த தொடரிலும் காயம் காரணமாக அவரது பெயர் இடம்பெறாமல் உள்ளது.

பௌலிங்கை பலப்படுத்தும் திட்டம்
தன்னுடைய பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார். இதனால் அணியின் பௌலிங் ஆர்டரை பலப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

மாம்ப்ரேவிடம் பயிற்சி
இந்நிலையில் என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட்டின் தலைமையின்கீழ் இஷாந்த் சர்மா தன்னுடைய பிட்னசை நிரூபிக்க தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்டர் -19 பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரேவிடம் அவர் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் உறுதி
இதனிடையே, மாம்ப்ரேவுடன் பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்வதன்மூலம், டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்குள் இஷாந்த் பிட்னசில் வெகு சிறப்பாக தேறுவார் என்று ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய தொடரில் அவர் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் அவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











