
போட்டியை அவர் உணர வேண்டும்
இந்திய அணியில் திறமையாளர்கள் பலர் உள்ளனர். கடும் போட்டி நிலவுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இஷாந்த் சர்மா தனது இமேஜை மாற்றியாக வேண்டியது அவசியமாகும்.

இலங்கை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது
இலங்கை டூரின்போது இஷாந்த் நடந்து கொண்ட விதம் துரதிர்ஷ்டவசமானது. அவரது நிலைக்காக நான் வருந்துகிறேன். ஆனால் அவரது செயலுக்கு நான் ஆதரவு தெரிவிக்க முடியாது. அவர் செய்தது தவறு.

நன்றாக பந்து வீசினார்
ஆனால் இலங்கை தொடரில் இஷாந்த் சர்மா நன்றாகவே பந்து வீசினார். அவரது குணம்தான் மாற வேண்டியுள்ளது. அது அணிக்கும் கூட நல்லது என்பதை அவர் உணர வேண்டும்.

பாடம் கற்றிருப்பார் என நம்பலாம்
பந்து வீச்சாளர்கள் குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்களுக்கு கோபமே எதிரியாகும். அதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும். நடந்த சம்பவத்திலிருந்து இஷாந்த் சர்மா பாடம் கற்றிருப்பார் என நம்புகிறேன் என்றார் அவர்.

தென் ஆப்பிரிக்கா வருகிறது
தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வரவுள்ள நிலையில் இஷாந்த் சர்மா குறித்து இப்படிக் கருத்துத் தெரிவித்துள்ளார் பானி டிவில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











