"ரொம்ப கஷ்டம்".. என்ன பிங்க் பால் மேட்ச் நடக்க போகுது.. இப்ப வந்து கோலி இப்படி பேசுறாரே.. ஷாக்கிங்!
சென்னை: இன்று நடக்க உள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி அளித்த பேட்டி பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்க உள்ளது. இது இரவு பகல் ஆட்டமாக நடக்க உள்ளதால் இன்று பிங்க் பால் பயன்படுத்தப்பட உள்ளது.
அஹமதாபாத் மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

கடினம்
இன்று நடக்க உள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பிங்க் பந்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதை எதிர்கொள்வது சிரமமான விஷயமாக இருக்கும். அதிலும் ஒரு அணி மாலைக்கு பின் இந்த பந்தில் பேட்டிங் செய்ய தொடங்கினால் அது சிரமமாக இருக்கும்.

எப்படி
அந்த அணிக்கு அது எதிராக திரும்பும் . ஸ்பின் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள், ஆனால் புதிய பந்தில் பாஸ்ட் பவுலர்கள் இன்னும் அதிக ஆதிக்கம் செலுத்த போகிறார்கள். புதிய பந்து தேயும் வரை பாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.

இரவு நேரம்
இது எப்படி இருக்க போகிறது என்று எங்களுக்கு தெரியும். இதற்கு ஏற்றபடி எங்களை நாங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறோம். கடந்த போட்டியில் நடந்த சசம்பவத்தை நாங்கள் பாடமாக எடுத்துக்கொண்டோம். அப்போது என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும்.

பிட்ச் மாற்றம்
மாலை நேரத்தில் பந்தை பார்க்கவே முடியாது. இதனால் மாலைக்கு பின் பேட்டிங் செய்வது இயலாத காரியமாக மாறியுள்ளது. இதை சமாளிக்கும் அணியே இந்த டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications