
3 போட்டிகளிலும் வெல்ல வேண்டும்
இதுகுறித்து டோணி கூறுகையில், நிலைமை சிக்கலாகவே உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் நாம் வென்றாக வேண்டும்.

முதல் போட்டியில் தோற்றாலே சிக்கல்தான்
எப்போதுமே முதல் போட்டியில் தோற்றால் நிச்சயம் நமது நிலை வாழ்வா சாவா நிலையில்தான் இருக்கும். அதுதான் தற்போதும் நடந்துள்ளது.

பாக்., ஆஸி, வங்கதேசத்தை வெல்ல வேண்டும்
நாம் அடுத்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் மோதவுள்ளோம். இதில் தோல்வி அடையாமல் இருக்க வேண்டும். ஒரு தோல்வியைச் சந்தித்தால் கூட சிக்கலாகி விடும்.

பாகிஸ்தானுடன் அடுத்த மோதல்
மார்ச் 19ம் தேதி நமது அடுத்த போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளோம். ஏற்கனவே நாம் பாகிஸ்தானை வென்றுள்ளோம். எனவே நிச்சயம் இதிலும் வெல்ல முயற்சிப்போம். வெல்வோம் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

வங்கதேசம் - ஆஸ்திரேலியா
பாகிஸ்தான் போட்டியை முடித்த பின்னர் மார்ச் 23ம் தேதி பெங்களூரில் வங்கதேசத்தை இந்தியா சந்திக்கவுள்ளது. கடைசியாக மார்ச் 27ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் அது மோதவுள்ளது.


Click it and Unblock the Notifications