நோ-பால் விக்கெட்
நேற்று டெல்லியில் நடந்த இலங்கைக்கு எதிரான நான்காவது நாள் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா முக்கியமான விக்கெட் ஒன்றை எடுத்தார். இலங்கை முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ் விக்கெட்டை நேற்று ஜடேஜா எடுத்தார். ஆனால் அந்த விக்கெட்டில் சந்தேகம் இருந்த அம்பயர் ஒருமுறை மூன்றாவது அம்பயரிடம் சோதனை செய்தார். பின் மேத்யூஸுக்கு விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் அது பால் நோ-பால் ஆகும். இதை மூன்றாவது அம்பயர் கவனிக்காமல் போய்விட்டார்.
|
கெத்து
இந்த நிலையில் இதை வைத்து ஜடேஜாவை பலரும் கலாய்த்து வருகின்றனர். இவர் ''ஜடேஜா நினைச்சா நோ பால்ல கூட விக்கெட் எடுக்க முடியும்'' என்று கூறியிருக்கிறார்.
|
புதுசா ஷு தயாரிக்கணும்
இந்த நிலையில் இவர் ஜடேஜாவை மிகவும் மோசமாக கலாய்த்து இருக்கிறார். அதில் "ஜடேஜாவிற்கான புதிய ஷு இதோ. நோ பால் போடாத அளவிற்கு நீளமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது'' என்று போட்டோ போட்டு எழுதி இருக்கிறார்.
|
இன்றும் நோ பால்
இந்த நிலையில் ஜடேஜா இன்றும் நோ பால் போட்டார். அதை இவர் கலாய்த்து இருக்கிறார். அதில் "கடவுளே மீண்டும் நோ பாலா. முதல் தடவை விக்கெட் கொடுத்துட்டாங்க, நல்லவேளை அவருக்கு இன்னொரு டைம் விக்கெட் கொடுக்கல'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் ஜடேஜாவால் குழம்பிப்போய் எது நோ பால் என்று விளக்கம் வேறு கேட்டுள்ளார்.
|
பரிசு
ஜடேஜா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்தநிலையில அதை வைத்து இவர் கலாய்த்து இருக்கிறார். இது ஜடேஜாவுக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு என்று கூறியுள்ளார்.